May 13, 2012

என்னவளின்றி நானில்லை...

ஒப்பனை செய்ய விருப்பமில்லை
மனம் ஒப்பாமல் செயலில்லை 
மதுவை குடிக்க புடிக்கவில்லை
உணவை ருசிக்க இஷ்டமில்லை
போதையில் மறக்க வழியில்லை
காலம் கரைய நேரமில்லை

கணவாய் காண முடியவில்லை
பிரிந்திட மனமும் நினைக்கவில்லை
ஆறுதல் சொல்ல அவளில்லை
மனம் துடிப்பதையவள் காணவில்லை 
காதலில் தோற்றால் வாழ்வில்லை
கரைந்து உடலானது நூலிலை

காதலியை மறக்க மனமில்லை
அவள் நினைவால் உறக்கமில்லை
என் வலியையவள் உணரவில்லை
என்னவலன்றி ஊன் உயிரில்லை
அவளிடன்சேர செல்வேன் பல எல்லை
என் காதலுக்கு விலையுமில்லை
அவளிடம் சேரும்வரை மரணமில்லை..

1 comment: