May 12, 2012

தாயும் தமிழும்

போட்டியில் வெற்றிபெற தாய் என்ற கட்டுரையை தமிழில் எழுதினேன் பரிசு எனக்கு இல்லை ஆங்கிலத்தில் எழுதிய மதர் என்ற கட்டுரைக்கு கிடைத்தது. விடை அறியாமல் அழுதேன், நீ எழுதிய கட்டுரையை படித்து காட்டு என்றால் அம்மா,  நான் படித்து முடித்த பின் என் தாய் அணைத்து முத்தம் கொடுத்தாள்.அந்த அன்பான முத்தத்திற்கு  இவ்வுலகில் ஈடு வேறேது? தமிழை போல தாயும் இனிமையானவள்  என்பதை  உணர்ந்தேன்.


No comments:

Post a Comment