November 28, 2012

காதல் அரும்புகள்



 Facebook காதல் கலாட்டா
------------------------------
----
நீ போடும் Statusக்காக
உன்னை காதலிக்கவா
இல்லை உனக்கு விழும்
Likeக்காக காதலிக்கவா
எப்படி இருந்தாலும் நம்
காதல் Fake id போல இல்லை

 
 
கிறுக்கல்
--------------
நீ கவிதை என்று எழுதிய
அணைத்து கிறுக்கல்களையும்
ரசித்தேன் உன் மேல் காதல்
கொண்ட பாவத்திற்காகவே
இனியும் தொடராதே
என் காதல் மனம் தாங்காது.



காதல் நிமிடங்கள் 
------------------------------
உன்னுடன் நான் இருந்த
ஒவ்வொரு நிமிடங்களில்
மகிழ்ச்சியும் சிரிப்பும்
உன்னுடன் நான் போட்ட
சின்ன சின்ன சண்டைகளில்
கோபங்களும் அழுகையும்
மாறாத காதலோடு வாழ்கையில்
என்றும் வேண்டும் காதலனே...

 



கருத்து
----------

பேஸ்புக்
ட்விட்டர்
கருத்து பதிவு
சட்டப்படி கைது
சுதந்திரம் ஏது ?
 


 
விலைமாது
-------------------

படுக்கையில் புரண்டதால்
பணம் புரட்டினேன்
பணத்தை புரட்டியதால்
வாழ்கையை புரட்டினேன்.


அன்புடன்
ஆயிஷாபாரூக் 
 

ஒலித்திடு




அரசியல் பதிவுகள் 
அரசியல் பதிவுகள் இனி எழுதக்கூடாது என்று நினைக்கிறேன்... அரசியல் பதிவுகள் எழுதும் போது ஒருதலை பட்சமாகவோ அல்லது உண்மையை மறைத்து கொண்டோ தான் எழுத வேண்டி உள்ளது. அரசியல் உண்மைகள் சிலருக்கு கசக்கும், சிலருக்கு இனிக்கும்...என்றுமே எனக்கு துவர்க்க தான் செய்கிறது. இங்கே கட்சி சார்பாக அரசியல் பதிவுகள் எழுதும் அனைவரும் தங்களின் மனசாட்சியை சாகடித்து கொண்டு தான் எழுதுகிறார்கள்.

உலக அழிவு 
உலகம் என்ன புதுசா அழியவேண்டி இருக்கு, ஏற்கனவே நாம எல்லோரும் அழிஞ்சு போயிட்டு இருக்குற உலகத்துல தான் நாம வாழ்ந்துட்டு இருக்கோம்...



ஜாதியும் ஜாதி கட்சியும் 
ஜாதி என்பது மனிதனில் கலக்கும் நஞ்சு, அது அவனை மிருகமாக்கும். அதுவே அந்த ஜாதி ஒரு கட்சியாக மாறினால் அது நாட்டிற்கே கேடு விளைவிக்கும். ஜாதியும் ஜாதி கட்சிகளும் புறக்கணிக்கபடும் வரை மனிதன் மனிதனாகவும் கட்சி மக்களுக்காகவும் இருக்காது.  

சமநிலை 
இங்கே யாரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை.அனைவரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளே... 

திருநங்கை
உங்கள் அப்பா என்றாவது உங்களை வெறுத்து நிராகரித்தது உண்டா? என்றாவது உங்கள் அம்மா உங்களை ஏற்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் தவித்தது உண்டா? உங்கள் சகோதரன் அல்லது சகோதரி உங்களை அவமானமாக நினைத்தது உண்டா? உங்களை உங்கள் சுற்றம், நட்பு கேலி செய்தது உண்டா? இத்தனையும் மீறி நீங்கள் வாழ்ந்தது உண்டா? ஒவ்வொரு திருநங்கையும் இத்தனையும் கடந்து தான் வாழ்கிறாள்... பல மனக்காயங்களை சுமந்து தான் வாழ்கிறாள்... வேதனையான மறுக்கமுடியாத உண்மை இது. 

பேரம் பேசுதல் 
பிரபலமான துணி கடைகளில் துணி வாங்கும் பொழுது துணியில் உள்ள அட்டவணையில் உள்ள விலையை சற்றே தயங்காமல் வாதம் செய்யாமல் பணத்தை கட்டி விடுகிறோம். சாலையில் கர்சீப் விற்கும் சிறு வியாபாரிகளிடம் ஒரு ரூபாய்க்கு கூட பேரம் பேசுவது நம்முடைய ஆதிக்கதன்மையும்,புத்திசாலி என்கிற நினைப்பையும் பிரபலமான துணி கடைகளில் நம்முடைய அடிமைத்தனத்தையும் பிரதிபளிக்கிறது. மாற்றம் வேண்டும் சிந்தனையிலும் செயலிலும்.

பழகுவது
எந்த காரணமும் இல்லாமல் யாரும் யாருடனும் பழகுவது இல்லை, தேவையின் அளவை பொருத்து அடுத்தவரோடு பழக்கம் கூட குறைச்சல் உள்ளது. காரணங்கள் பலவகையாக இருக்கலாம் பணமோ, பொருளோ, அன்போ இப்படி எதுவும் இருக்கலாம். இது இயற்கை இதில் தவறும் இல்லை. அதிக சுயநலம் தான் பழக்கவழக்கத்தில் கூடாது.
அன்புடன் ஆயிஷாபாரூக்  

November 22, 2012

மச்சானுக்கு செய்தி வெச்சேன்




காடுக்கரை வேர்வ சிந்தி
உளைச்ச என் மச்சானுக்கு 
பக்குவமா கம்மங்கு கூழு
கிண்டிவைச்சு பத்திரமா
வூடு சேர சன்னலோரம்
நின்னு எட்டி பார்துதிருந்தேன்
மணிக்கணக்கா காத்திருந்தேன்

தாமரைபூ சிரிப்ப போல
மச்சான வரவ பார்த்துபுட்டு
சூடான தண்ணீர கலந்து
உடல்சோர்வ போக்க  
கொல்லையோரம் எடுத்துவெச்சு
சந்தன மணக்க மச்சான்
குளிச்சு வந்து என் முந்தானை
ஈரம்பட தலைய தோர்த்திவிட்டேன்

ராப்பகலா உழைச்சு பசியாறும்
மச்சானுக்கு சேதி வெச்சேன்
நீ குடிச்ச கஞ்சியிலே
என் வயிறும் நிரஞ்சுருச்சு
நீ போட்ட வெத்தலையில்
என் நாக்கு செவந்துருச்சு
சாம்பலும் மாங்காவும்
தின்ன ஆசை வந்தாச்சு
குளிச்சு நாளும் ஆயாச்சு
வெட்கப்பட்டு மாமன் தோளில்
சாஞ்சு செய்தி சொல்லி
மார்போரம் கோலம் போட்டேன்
பாசம் பொங்க அணைச்ச
மச்சான்கிட்ட வார்த்தை மறந்து
நானும் சொக்கி நின்னேன்....

அன்புடன் 
ஆயிஷாபாரூக்

November 19, 2012

காதல் தோல்வி எனக்கில்லை

காதல் தோல்வி
அடைந்த உன்னை
மனமார காதலிக்கிறேன்
அன்பின் ஆழத்தையும்
வலியின் வடுகளையும்
உறைந்த கண்ணீரையும்
சுமந்த உன் இதயம்
இனி ஏமாறக்கூடாது

மறந்து சென்றவளை
நினைக்கும் உன் மனம்
உனக்காக உருகி நிற்கும்
என்னை காணவில்லையா?

விலகி சென்றவளை
விரும்பும் உன் இதயம்
விழிப்பார்த்து உன்னை
வரவேற்கும் என் மனதை
உனக்கு புரியவில்லையா?

காதல் தோல்வியின்
வலியை அறிந்த நீ
எனக்கும் அந்த வலியை
தருவது முறையோ
ஆருயிரே! என்னுயிரே!

வாழ்வும் மரணமும்
உன்னுடன் என
வந்துவிட்ட எனக்கு
உன்னுடைய எந்த பதிலும்
காதல் சம்மதம் தான்

அன்புடன்
ஆயிஷாபாரூக்

November 15, 2012

சூப்பர் காதல் கவிதைகள் - பெண்களின் காதல்

 கண்ணாடி வளையல்
  
தங்கத்தால சேஞ்சு
கல்லு கொஞ்சம் பதிச்சு
மின்னும் வைரம் போல
அன்பு மனசு சிலிர்க்க
ஆசை பட்டு கேட்டேன்
என் அத்தான்கிட்ட வளையலு
 
வெள்ளிகழமை சந்தையிலே
வேகாத வெயிலிலே
ராவு பகலா வேர்வை சிந்தி
உளைச்ச மச்சான்
வாங்கி வந்தான் வளையலு
அது கண்ணாடி வளையலு

கூரை வீட்டுக்குள்ளே
கஞ்சி சோறு பிணைஞ்சு
வெங்காயம் மிளகு கில்லி
ஆசையா ஊட்டிவிட்டேன்
மாமன்கிட்ட செய்தி சொன்னேன்
தங்கமென்ன வைரமென்ன
அன்புகொண்ட வளையமா
ஆசைத்தீர பாசம்பொங்க
என் சாமி நீயிருக்க
கண்ணும் மின்னும் இந்த
கண்ணாடி வளையல் போதும்
ஓசை கலகலக்கும் இந்த
கண்ணாடி வளையல் போதும்
மாமா! இந்த கண்ணாடி
வளையல் போதும்…..
 
அழகிய ராட்சஸி
 
 உன் தேவைகளை
அறிந்து செய்யும்
அசிங்கமான தேவதை
உன் அன்புக்காக
தொந்தரவு செய்யும்
அழகிய ராட்சஸி
உயிருடன் கொல்லும்
உன்னுடைய ஏக்கம்
உறைந்து போகும் முன்
என்னுயிர் பிரியும் பின்
என் கல்லறை
முன்பு அழுவதைவிட
உன்னுடன் இருக்கும்
ஒவ்வொரு நொடிகளில்
என்னை காதலி
அன்பு காதலனே
உயிருடன் மோட்சம் அடைவேன்...
 
 

 விடை சொல்லிவிடு
 
உன் குறுகுறு பார்வை
குளிர் காற்றை வீசுதே
மனம் ஏனோ மகிழ்ந்து
வானில் பறந்து திரியுதே
நேரில் சொல்ல எழுதி
வைத்த கவிதை நூறு
முகத்தை கண்டு சொல்ல
மறந்த வார்த்தை நூறு
மனதினில் ஒளித்து வைத்தேன்
புன்னகைக்கண்டு மறந்து போனேன்
மந்திரம் தந்திரம் என்ன செய்தாய்
மனதில் நுழைந்து ஆட்சி புரிகிறாய்
என்ன செய்வேன் எப்படி சொல்வேன்
காதல் நோயின் மருந்தே நீயென
மனம் படும்பாடு தெரிகிறதா
வஞ்சியின் மனநோய் புரிகிறதா
விடை சொல்லிவிடு என் மன்னவா
எந்தன் வாழ்க்கை உனது அல்லவா... 
 
அழகான மூன்று காதல் கவிதைகள்... காதல் செய்யும் எல்லா பெண்களுக்கும்... 
 
அன்புடன்
ஆயிஷாபாரூக் 
 

November 12, 2012

தீபாவளி ஸ்பெஷல்


என் அன்பான அணைத்து தோழர் தோழிகளுக்கும் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள் கவிதை மூலமாக தெரிவித்து கொள்கிறேன். அன்புடன்
ஆயிஷாபாரூக்

November 5, 2012

கட்டவிழும் ஆண்மை...




மோகத்தால் எழுந்த அலைகள்
மேலும் கீழுமாய் மோதிவிட்டு 
மோட்சம் தேடி அலைகிறது
இரவும் பகலுமாய் சுழலும்
காலங்களிலும் அணையா விளக்காய்
மனதில் எழுந்த மின்னல்கள்
உன்னுடலின் காந்த அலைகளில்
அதிரும்  வேகத்தில் மோதிவிட
அனைத்தலும் ஆக்கமும் ஒருசேர
இருமனமும் ஈரமாய் உடலிறுகி
ஆழ்கடலின் ஆழத்தை சுடரும்
திரியாய் ஊடுருவி நீதேட
தேக்குமரத்தை சுற்றிய பூக்கொடியாய்
கண்விழி ஈரம் வழிந்து உண்மூச்சை
சுவாசித்த வண்ணம் ரசிக்கிறேன்
கட்டவிழும் உனது ஆண்மையை...
அன்புடன்
ஆயிஷாபாரூக்