May 12, 2012

நீங்காத நினைவுகள்

மறைந்துவிட்ட உறவுகளின் 
நீங்காத நினைவுகள்

உதிர்ந்துவிட்ட பூக்களின்
உலராத வாசனை

இழந்த அன்பானவரின்
நீங்காத பொழுதுகள்

இதயம் துடிக்கும் வரை
மாறாது நினைப்பு

இயற்கையின் அழைப்பு
மீறமுடியாத பயணம்

காலம் இழப்பின்
காயத்தை மாற்றும்

காலம் கடந்தாலும்
நீங்காது நினைவுகள்….

நம்மை விட்டு பிரிந்த நம் உறவுகளுக்கு ஒரு நினைவஞ்சலி.... 

No comments:

Post a Comment