May 13, 2012

ஆள் கடத்தல் - ஒரு கண்ணோட்டம்

ஆள் கடத்தல் தற்போது அதிகம் வருவாய் கொண்ட தொழிலாக மாறியுள்ளது. குஜராத்தில் உள்ள பின்தங்கிய குக்கிராமங்களில் உறவினர்களே தங்கள் வீட்டில் உள்ள பெண்களை சுலபமான பண வருவாய்க்கு பெண்களை பல ஆண்டுகளாக  பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்துகின்றனர். பங்களாதேஷில் சில இடங்களில் பெண்களை கால்நடைகளுக்கு கொடுக்கும் கொழுப்பு ஊசி செலுத்தி பெண்களை வயாபார சந்தையில் அதிக விலைக்கு விற்கிறார்கள்.

ஒரு ஆய்வின்படி உலகில் 2.4 மில்லியன் பெண்கள் கடத்தபடுகிறார்கள். அவர்களில் 80 சதவிதம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தபடுகின்றனர். உலகில் 32 பில்லியன் வருவாய் ஆண்டுதோறும் ஆள்கடத்தல் மூலமாக  ஈட்டபடுகிறது. தென் ஆசியாவில் 1,50,000 பெண்கள் ஆண்டுதோறும் கடத்தபடுகிறார்கள்.

கடத்தப்படும் பெண்களில் அதிகம் பேர் பின்தங்கிய கிராமங்களில் இருந்தும், வீட்டுவேலைக்காக நகரத்திற்கு சென்ற பெண்களும் கணிசமான அளவில் உள்ளனர். இவர்களில் அதிகம் பேர் பெண்களால் கடத்தப்படுகின்றனர் என்பது வியப்பான உண்மை. கடத்தப்பட்ட பெண்கள் பலர் வலுகட்டாயமாக பாலியல் தொழிலிற்கு தள்ளபடுகின்றனர். அவர்களை பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடுத்திகின்றனர். கடத்தப்பட்ட பெண்கள் சிலர் கொத்தடிமைகளாக விற்கபடுகின்றனர்.

பெண்களை தெய்வமாக கருத்தும் நம் நாட்டிலும் இத்தகைய சுழல் இருப்பது நாம் வேதனையும் வெட்கப்படவேண்டிய விஷயமாகும். இதற்கு என்ன தீர்வு? அரசும் தனார்வஅமைப்புகளும் காவல்துறையும் பொதுமக்களும் இணைந்து ஆள் கடத்தலை தடுக்கவேண்டும். நாமும் இணைந்து போராடுவோம் நண்பர்களே..

No comments:

Post a Comment