May 12, 2012

போர் குற்றங்கள் - இனத்தின் ஒரு சாட்சி

இலங்கையில் வாடும் எனது தமிழ் இனத்தின் உடன் பிறப்புகளுக்கு இதை சமர்பிக்கிறேன்....

ஒளிவீசும் கதிரவனை காலையில் பார்க்க கண்கள் கூசும், அனால் எங்களுக்கு அநீதி செய்த இந்த மனிதர்களை பார்க்கும் போது கண்கள் கூசுகிறது. இன்னும் எங்கள் வாழ்வில் இருள் சூழ்ந்து கொண்டு இருக்கிறதே என்று நெஞ்சம் துடிக்கிறது. போர் முடிந்து இரண்டு வருடங்களாகியும்   இன்னும் நான் போர்கள குற்றவாளி போல தான் இங்கு நடத்தபடுகிறேன்.

என் இனமே அழிந்து விட்டது இன்னும் இந்த உயிர் உடலில் எதற்கு? காலையில் எழுந்தவுடன் எனது அம்மாவை கட்டிபிடித்து முத்தம் கொடுப்பேன், எப்பொழுது எங்கே தேடுவேன் எனது தாயின் அரவணைப்பையும் அந்த பாசத்தையும் இந்த இரத்த பூமியில், கூப்பிடும் தூரத்தில் கூட  இல்லை அவள். கண்ணீர் வார்த்தபடி நான் ஏக்கத்துடன் கடைசியாக என் அன்னை கன்னத்தில் முத்தமிட்டு நெகிழ்ந்ததை நினைத்து கொண்டேன்.

என்னுடன் இருந்தவர்கள் எனக்கு இப்போது   காணகனவாக இருக்கிறார்கள், அவர்களின் நினைவாக நான் மட்டுமே இருக்கிறேன். இங்கே பாடி திரியும் குயில்களின் ஓசையைவிட உயிர்களை காவு வாங்கும் குண்டின் சத்தமும் துப்பாக்கி தோட்டாக்களின் சத்தமமும்தான்  அதிகம் கேட்டேன். யாராவது எங்களுக்கு உதவ மாட்டர்களா என்று நாங்கள் இறைவனிடத்தில் தொழாத நாட்கள் இல்லை... 

எனது இனத்தின் உறவுகள் அண்டை நாட்டில் இருந்தும் எந்த பலனும் இல்லை. எல்லாம் முடிந்து விட்டது இன்று. எஞ்சியது சடலங்கள் தான் மண்ணோடு.. எனது உறவுகள் பலர் போர் என்ற பெயரில் அநியாயமாக துன்புறத்தபட்டு   கொல்லப்பட்டனர்..

நான் மாட்டும் ஏன் உயிர் பிழைத்தேன்? இனி நான் மட்டும் ஏன் உயிரோடு இருக்கவேண்டும் என  நினைத்தேன்... எனது இனம் என்னை சாட்சியாக விட்டு சென்றுள்ளது.. ஆம் நான் உயிரோடு இருந்தால் தான் என் கண்முன்னே நடந்த அணைத்து அக்ரமங்களும்,கொலை குற்றங்களும், பாலியல் வல்லுருகள், கொடூர செயல்கள் அனைத்துக்கும் சாட்சியாக என்றாவது சர்வதேச நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுப்பேன் என்று!

போர் என்ற போர்வையில் எனது இனத்தின் அப்பாவி உயிர்களை காவு வாங்கிய இரத்த வெறி பிடித்த கொடூர மனிதர்களை நீதியின் முன்னால் நிறுத்தாமல் எனது உயிர் இளைபாராது.... இன்றைய நாளாவது நீதிக்கு வழிவுகுக்கும் நேரம் வரும் என்ற நம்பிக்கையில் படுக்கையை விட்டு மனஉறுதியுடன் எழுகிறேன் இந்த நொண்டி காலுடன்... இந்த உலகத்தின் கடைசி நாள் வரை நீதி சாகாது!

No comments:

Post a Comment