May 13, 2012

வாழ்கை இனிமையானது

நம் வாழ்கை நம்முடையது; நம் சமுதாயம் நம்முடைய வாழ்கை முறையை அமைக்கிறது. நம் வாழ்கை எந்த ரீதியில் எவ்வாறு பயணிக்க வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்கவேண்டும். எது நல்லது, எது கெட்டது அன்பதை நாம் தான் முடிவு செய்யவேண்டும். பிறரின் முடிவிற்கு நம்முடைய வாழ்க்கையை விட்டு விட கூடாது, அடுத்தவர் தரும் ஆலோசனைகளை வேண்டுமானால் நாம் தீர ஆராயலாம். அந்த செயலுக்கான முடிவு நாம் தான் எடுக்க வேண்டும். மற்றவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள், என்ன பேசுவார்கள் என்று கவலைப்பட்டு வாழக்கூடாது, உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை செய்யுங்கள்.

உங்கள் முடிவுகள் அடுத்தவர்க்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவகையில் இருக்கவேண்டும்.உங்கள் மனதுக்கு பிடித்தபடி நல்ல சிந்தனையுடன், நல்ல செயலுடன் உங்கள் விருப்பத்திற்கு வாழ பழகுங்கள், உங்கள் வாழ்கை உங்களுடையது, வாழ்வது ஒரு முறை ஆனாலும் மனநிறைவோடு மனதார வாழ பழகுங்கள்.. வாழ்கை மிகவும் இனிமையானது நண்பர்களே...

அழகு முகத்தில் இல்லை நடத்தையில் இருக்கிறது.
காதல் அறிவில் இல்லை அன்பில் இருக்கிறது.

பொறுமை வார்த்தையில் இல்லை செயலில் இருக்கிறது
பிராத்தனை வரிகளில் இல்லை பக்தியில் இருக்கிறது.
வாழ்கை பிறரிடம் இல்லை நம் கையில் இருக்கிறது.

No comments:

Post a Comment