May 12, 2012

அமைதி தழைக்கட்டும்....


இறைவன் மனிதனை படைத்தான், மனிதன் ஜாதி, மதம்,மொழி,இனம் ஒருவாக்கி பல வேற்றுமைகளை உருவாக்கினான். அதனால் இன்று மனிதர்களிடம் பலதரப்பட்ட வேறுபாடுகள், அதனால் பிரச்சனைகள், குழப்பங்கள் பல. ஒரு சூரியன், ஒரு பூமி, ஒரே காற்று இன்று அனைத்து மனிதர்களுக்கும் இறைவன் பாகுபாடு இல்லாமல் கொடுத்தான், மனிதானகிய நாம் செய்யும் எல்லா செயல்களிலும் பாகுபாடு ஏற்படுத்தி கொண்டோம். நிலையில்லா நாம் நிலையான மண்ணிற்காக சண்டைபோடுகிறோம்.

அமைதி என்பதை வேண்டும் என்றே தொலைத்து விட்டு தேடுகிறோம். நிம்மதி இல்லாமல் தவித்து மனம் கலங்கி அலைகிறோம். வேற்றுமையை கலைந்து ஒற்றுமையாக வாழ்ந்தால் நமக்கு நிம்மதி கிடைத்து மகிழ்ச்சி பொங்கும்.. மானுடம் இல்லேயேல் அழிந்து போகும் சூழ்நிலை உருவாகும். மனிதர்கள் நமக்கு எது வேண்டும் என்பதை தீர்மானம் செய்ய அறிவு கொடுத்து இருக்கிறான், அனால் நாம் அறிவை நல்ல வழியில் பயன்படுத்தாமல் தீய வழிகளில் பயன்படுத்தி நம்மையும் நம்மை சுற்றி உள்ளவரையும் அழிக்கிறோம். உலகம் அமைதி பொங்க நாம் ஒற்றுமையாக, நட்புடன் அனைவரையும் அனுசரணையுடன் பழகினால் அதுவே நாம் இறைவனுக்கு செய்யும் நன்றி ஆகும்.. அமைதி தழைக்கட்டும்..


No comments:

Post a Comment