May 12, 2012

யார் உண்மையான அரசியில்வாதி?

ஆங்கிலேயரை எதிர்த்து சிறைக்கு சென்றார்கள் அன்றைய அரசியில்வாதிகள்
ஊழலில் பிடிபட்டு சிறைக்கு சென்றார்கள் இன்றைய அரசியில்வாதிகள்!

ஊருக்காக உழைத்தார்கள் அன்றைய அரசியில்வாதிகள்
தங்கள் குடும்பத்திற்காக உழைக்கிறார்கள் இன்றைய அரசியில்வாதிகள்!

பொதுநலமனம் படைத்தவர்கள் அன்றைய அரசியில்வாதிகள்
சுயநலமனம் படைத்தவர்கள் இன்றைய அரசியில்வாதிகள்!

ஏழையின் சிரிப்பில் மகிழ்ந்தார்கள் அன்றைய அரசியில்வாதிகள்
ஏழையின் அழுகையில் மகிழ்கிறார்கள் இன்றைய அரசியில்வாதிகள்!

உயிர்த்தயாகம் செய்து சுதந்திரம் வாங்கித்தந்தார்கள் அன்றைய அரசியில்வாதிகள்
ஏழைகளின் வைதெறிச்சலில் சுதிந்திரவாழ்கை வாழ்கிறார்கள் இன்றைய அரசியில்வாதிகள்!

நாடும் நாட்டுமக்களும் வளம் பெற உழைத்தார்கள் அன்றைய அரசியில்வாதிகள்
வீடும் வீட்டில் உள்ளவரும் வளம் பெற உழைக்கிறார்கள் இன்றைய அரசியில்வாதிகள்!

மானம்காத்த வீரமான தலைவர்கள் அன்றைய அரசியில்வாதிகள்
மானம்கெட்ட கேவலமான தலைவர்கள் இன்றைய அரசியில்வாதிகள்!

படித்த இளைய சமுதாயம் இன்றைய அரசியலில் எடுபடவேண்டும். ஊழல் இல்லா தலைவர்களாக, இந்திய மக்களின் நலன் கருதும் சுயநலமற்ற அரசியில் தலைவர்கள் வேண்டும். மக்களும் ஊழல் எதிர்ப்பில் விழிப்புணர்வுடன் செயல்பட்டு ஊழல் இல்லா தேசமாக உருவாக்க வேண்டும்.

சுதந்திரம், குடியரசு தினங்கள் விடுமுறைக்கு மட்டுமே பிரயோஜனமானது இன்று -  என்று வறுமையில்லா, ஊழல் இல்லா தேசமாக இந்தியா மாறுமோ அன்று தான் எங்களுக்கு உண்மையான சுதந்திரமும், குடியரசும்....

இப்படிக்கு இந்திய குடிமகள்

No comments:

Post a Comment