October 31, 2012

நீலம் புயலும் காதலும்... ஆண்கள் ஸ்பெஷல்

அழகான சூழல் இதமான பருவம், சாரலுடன் காற்று சொல்லவே வேண்டாம் கூட ஒரு கப்பில் சூடான தேநீர், ரசனைக்கும் கவிதைக்கும் பஞ்சமே இருக்காது. என்னோட காதலுனுக்காக எழுதினது... ஆனாலும்

இந்த கவிதைகள் அனைத்தும் ஆண்களுக்கு சமர்பிக்கிறேன்.



நீ பேசுவது பொய்யென
தெரிந்தும் ரசித்தேன்
உதட்டில் பொய்யும்
உள்ளத்தில் மெய்யும்
கொண்டு பொய் பேசும்
ஆண்கள் அழகு தான்! 



என் காதோர ரிங்காரம்
பாடும் கொசுவிடும் சொல்வேன்
என்னை மறந்து தூங்கும்
காதலனை என்
தூதுவனாய் போய் கடி...




இதயம் ஈர்க்கும்
வசியம் அவனிடம்
மட்டுமே உள்ளது
கண்கள் குளிரவும்
கண்கள் நனையவும்
செய்பவன் அவனே
என் வசியக்காரன்




நீ பிடிக்கும் சிகரெட்டிற்கு
தெரியாது உருக்குவது
உன்னுயிர் மட்டும் அல்ல
என்னுயிரும் சேர்த்தேயென
புகைப்பதை நிறுத்திவிடு காதலனே
கரையும் சிகரெட்டை உணரும் நீ
கரையும் என் மனதை உணர்வாயோ!
 
 




 நீ முத்தமிடும் போது
என் கன்னத்தில் குத்தும்
உன் மீசை உணர்த்துகிறது
ரோஜாவை காக்கும் முட்களை...


நம்ம நீலம் புயலுக்குக்காக ஒரு குட்டி கவிதை... புயல ரசிச்சுட்டு மழைல நனைஞ்சுட்டு இந்த கவிதைய படிங்க.. அப்போ தான் SUPER EFFECT இருக்கும் !!!


  

நீலம் புயலே நீலம் புயலே
உள்ளம் கொல்லும் சூறாவெளியே
பெய்த்திடும் மழை மூலம்
குளிர் பரவி சிலிர்த்தாயே
மனம் அதிலே நனைந்தபடி
கவி எழுத அழைத்தாயே
காற்றாய் மாறி புயலானாய்
வெப்பம் தனித்து குளிரானாய்
புயலை தணிக்க மழையானாய்
சாயம் போகா நீலம் புயலே...
 
கவிதைகள் ரசிச்சு இருப்பிங்கன்னு நினைக்கிறன்...  நீலம் புயல் அமைதியாக கரையை கடக்கட்டும்... 

அன்புடன்
ஆயிஷாபாரூக்

16 comments:

  1. கவிதைகள் பல விதம்

    உங்களின் கவிதைகள் ஒரு புது விதம் ....

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

      Delete
  2. அருமை அருமை
    கவிதைகள் அனைத்தும் மனம் தொட்டது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

      Delete
  3. கவிதைகள் அருமை... தொடரட்டும் கவிதைகள்.

    ReplyDelete
  4. நீலம் புயல் இப்போது கரைஅயைக்கடப்பதாக டி வி யில் ந்யூஸ் வந்துகிட்டிருக்கு. கவிதை நல்லா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

      Delete
  5. ஒவ்வொன்றும் பல முறை ரசிக்கக் கூடியதாய் இருக்கிறது

    ReplyDelete
  6. ஆஹா! இந்த நேரத்தில் உங்க கவிதை மனதுக்கு இதமாக இருக்கிறது.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

      Delete
  7. அனைத்தும் அருமை...

    பாராட்டுக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

      Delete
  8. காதல் கவிதைகள் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

      Delete
  9. ம்ம் அருமை டீ....

    ReplyDelete