February 9, 2013

நாம் திருநங்கைகள்


அன்பு தோழிகளே…
வாழ்க்கை ஆட்டத்தில்
பெற்றோர் நிராகரிப்பு
சுற்றம் ஒதுக்குதல்
காதல் மயக்கம்
காமப் பசி
வாழ்க்கை ஏக்கம்
பொருளாதார தவிப்பு
எதிர்கால பயம்
இப்படி சுற்றிலும்
சூழ்நிலை பின்னடைவுகள்
ஆக மன சோர்வுகள்
வாழ்கையில் பயம்
இழந்தது எத்தனையோ
தவித்தது ஓராயிரம்
வாழ்ந்தே ஆகவேண்டும்
வாழ்கிறோம் ! இனியும் வாழ்வோம்
வாழ்ந்தே ஆவோம்
எதையும் துணிவோடு எதிர்கொண்டு
நாம் திருநங்கைகள்.....

                                                                                                                                  ஆயிஷாபாரூக்

5 comments:

  1. திருநங்கைகளுக்கென்று தனிப்பட்ட சோகங்கள் வாழ்க்கையில் உண்டு. மறுக்கவில்லை.அதே போல மற்றவர்களுக்கும் உண்டு. எனவே எல்லாருமே சோகங்களால் சூழப்பட்டு, அழந்தப்பட்டுதான் வாழ்கின்றோம். ஆனாலும், அவ்வாழ்க்கை, வாழ்ந்தே ஆக வேண்டும், வாழ்ந்தே தீருவோம் என்று வாழப்படவேண்டாம்.

    இருக்கின்ற வாழ்க்கையில் உய்த்துணர்ந்து தேடும்போது ஆங்காங்கே மகிழ்ச்சிதரும் விடயங்கள் இருக்கும். ஆக வாழ்க்கை இனிக்கத்தான் செய்யும்.

    எனவே திருநங்கைகள் எனச்சோர்வு வேண்டாம். வாழ்ந்தே ஆக வேண்டுமென நினைக்கவேண்டாம்.

    வாழ்வோம். மகிழ்ச்சியாக. ஆயிரம் பேர் நம்மை வேறுமாதிரியாக நடாத்தினாலும், அல்லது நினைத்தாலும், ஒரு பத்துபேர் அல்லது ஐம்பது பேர் நம்மை நம்மில் ஒருவராக வைத்துக்கொள்வர். அவர்களோடு நாம் மகிழ்வோம்.

    உங்கள் ஃபோலோயர்கள் நிறைய இருக்கின்றார்கள். எனக்கோ ஒருவருமே இல்லை. My Tamil blog remains unread for years.

    என்னைவிட நீங்கள் அதிர்ஷ்டசாலிதான். ஆனால் நான் அதைப்பற்றி வருந்தவில்லை. ஏனெனில்,

    'உனக்கு கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு"

    I cried to dad: Give me 5 thousand to buy a Lotto Shoes. I stopped crying when I saw a man with no legs!

    ReplyDelete
    Replies
    1. சராசரி ஆண், பெண்ணின் வாழ்கையை விட எங்களின் வாழ்வு சற்று கடினமாக தான் உள்ளது. வீட்டிலிருந்து வேற்றுமை தொடங்கி சமுதாயம் வரை நாங்கள் சந்திக்காத கஷ்டங்கள் இல்லை, கவலை இல்லை. இத்தனையும் எதிர்கொண்டு தான் நாங்கள் வாழ்கிறோம். மனம் வெறுத்து தான் பலர் வாழ்கிறோம், அவர்களுக்கு உத்வேகம் கொடுக்க தான் இந்த கவிதை தோழரே...

      Delete
  2. யாராக இருந்தால் என்ன...? மகிழ்ச்சி உட்பட அனைத்தையும் ஏற்படுத்திக் கொள்வது நம் மனமே...

    ReplyDelete
  3. இவர்களும் மனிதர்களே , அவர்களும் வாழ நாமும் ஆதரவு தருவோம்

    ReplyDelete
  4. otrumai irundhal vetri kollalaam.vazthukkal

    ReplyDelete