February 8, 2013

ஆயுள் முழுதும் நீ வேண்டும்

நீ நல்லவனா கெட்டவனா
ஒரு நேரம் நல்ல நண்பனாய்
ஒரு நேரம் அன்பு காதலனாய்
ஒரு நேரம் இன்பத்தின் ஊற்றாய்
ஒரு நேரம் புரியாத புதிராய்
ஒரு நேரம் கண்களின் கண்ணீராய்
ஒரு நேரம் தனிமையின் துணையாய்
ஒரு நேரம் கவலையின் உருவமாய்
ஒரு நேரம் ஏக்கங்களின் வடிகாலாய்
நீ எப்படி இருந்தாலும் ரசிப்பேன்
நேரம் போக்க அல்ல என் ஆயுளை கடக்க
வாழ்க்கை முழுவதும் நீ வேண்டும்....
                                                                                                                                    ♥ ஆயிஷா பாரூக் ♥

1 comment:

  1. சிறப்பான கவிதை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete