February 11, 2013

ஒரு காதலனின் தவிப்பு

உங்க ஆயிஷாவின் புது முயற்சியா நான் இது வரை காதலியின் காதல் தவிப்பை தான் எழுதி வந்தேன். இப்போ ஒரு காதலனின் தவிப்பை எழுதுகிறேன்.. 


ஏய் புள்ள என் புள்ள
மனச தவிக்க விட்டியே
உன் சுவாசம் என் வாசம்
தவிக்க விட்டு கொல்லுதே
உன் நினைப்பு நெஞ்சுக்குள்ள
என்னனமோ பண்ணுதே
மனசுக்குள்ள ராட்டினமா
உன் உருவம் சுத்துதே
அடியே…….. செருக்கி………..
மனச…….. உருக்கி…………..
சிங்கத்தையே சாட்சியே
மான் விழி கண்ணாலே
மந்திரமும் போட்டியே
காதல் போதை பேச்சாலே
கிறங்கி தவிக்கும் காளை தான்
உன் வாழ்க்கைக்கு காவல் நான்
வாடி புள்ள சோடி சேர
ஏய் புள்ள என் புள்ள
மனச தவிக்க விட்டியே
உன் சுவாசம் என் வாசம்
தவிக்க விட்டு கொல்லுதே….

♥ஆயிஷாபாரூக்♥

4 comments:

  1. நல்லாவே தவிப்பை உணர்த்தின வரிகள்.

    ReplyDelete
  2. தவிப்பின் மிச்சங்கள் உணர வைத்தது

    ReplyDelete