February 24, 2013

புன்னகைத்த பூக்கள் காதலை மறுத்ததால்

 புன்னகைத்த பூக்கள்
காதலை மறுத்ததால்
அமிலத்தால் பொசிங்கன
உயிரும் கருகின
பெண்ணாக பிறந்ததால்
இந்த நிலைமையோ
அந்த பேதையின்
கண்ணீரை அறிவீரோ
இந்த வலியின்
கொடுமை உணர்வீரோ
பெற்றோர் படும்பாட்டை
எதைக்கொண்டு களைவீர்
எதை சாதித்தீர் அந்த
உயிரை மாய்த்து
வெறிபிடித்த பிண்டமே
உன் ஆணவத்தை அழிக்க
உன் ஆண் குறியில்
அமிலம் ஊற்றினால்
அழிந்துவிடும் உன்
பெண் மோகம்
பின்பு எந்த பூவும்
இனி கருகாது.......... 
நேற்று வினோதினி,இன்று வித்யா நாளை யாரோ ? எத்தனை கொடுமையான நிகழ்வு ஒரு உயிரை அமிலம் ஊற்றி சாகடிப்பது... வேண்டாம் இது போன்ற கொடுமைகள், வைக்க வேண்டும் இதற்க்கு முற்று புள்ளிகள்.. என் கவிதை மிகுந்த ஆக்ரோஷமாக தோன்றலாம் பலருக்கு. இப்படி பட்ட தண்டனை நிறைவேற்றபட்டால் நாளை எந்த ஆணும் துணிந்து பெண் மீது அசிட் ஊற்ற மாட்டான்.  
                                                                                                                                                                  **ஆயிஷாபாரூக்**

4 comments:

  1. உண்மைதான்! இப்போதெல்லாம் ஆசிட் வீச்சுக்கள் அதிகமாகிவிட்டன. கடுமையான தண்டனை வழங்க வேண்டும்!

    ReplyDelete
  2. வேதனையின் உச்சகட்டம் இந்த அமிலவீச்சு சம்பவங்கள்

    ReplyDelete
  3. இதுபோன்ற மனிதர்களின் மனநிலை எப்போதுதான் மாறுமோ

    :(

    சிவாவின் கற்றதும் பெற்றதும்

    ReplyDelete