February 17, 2013

ஆயிஷாபாரூக்


தெளிந்த மனமுடன்
தேங்காத நதியாய்
வாழ்க்கை கடலில்
எதிர்நீச்சல் அடித்து
பொறுமை ஆயுதமுடன்
எதிர்வரும் ஏளனங்களை
நிலம்போல பொறுத்து
தீமைகளை தீயன
மனச்சுடரில் எரித்து
துணிவோடு எதிர்த்து
மடமையை அழித்து
அறிவுடன் செழித்து
கவலையை காற்றில்
பட்டம்போல பறக்கவிட்டு
மனமதை திடமுடன்
வருவதை சந்தித்து
பரந்த வான்போல
வாழ்வை விரிவாக்கி
மகிழ்ச்சியை பெருக்கி
கவலைகளை சுருக்கி
வாழ்கிறேன் நான் ஒரு
திறமையான நங்கையாக!
ஆயிஷாபாரூக்

1 comment: