September 23, 2012

மனமதை திறக்கலாம்




சேர்ந்திடும் நீர்த்துளிகள்
கடலாக மாறாலாம்
அடைந்திடும் தோல்விகள்
அனுபவ பாடமாகலாம்
துணிந்திடும் இதயம்
பயத்தை விரட்டலாம்

உடைந்த மனம்
எதையும் தாங்கலாம்
அடைந்த அவமானங்கள்
சகிப்பை வளர்க்கலாம்
காணுற்ற அலட்சியங்கள்
பொறுமையை அளிக்கலாம்

தீயக் குணங்கள்
தீமையை தரலாம்
பேராசை மனம்
பேரழிவை வழங்கலாம்
வஞ்சக  எண்ணம்
அமைதியை பறிக்கலாம்

போராடும் குணம்
பலவற்றை வெல்லலாம்
தோல்விகளின் வரவு
வெற்றிகளை பெருக்கலாம்
வாழ்வின் பயணம்
உண்மையை உணர்த்தலாம்

சேர்த்திடும் சேமிப்பு
வறுமையை விரட்டலாம்
பயின்றிடும் கல்வி
காலத்திற்கும் உதவலாம்
நல்ல எண்ணங்கள்
நல்வாழ்வை கொடுக்கலாம்

எனது வரிகள்
மனமதை திறக்கலாம்
உணர்த்திடும் பொருள்
அறிவினை உயர்த்தலாம்
விரைந்திடும் செயல்
புதியப்பாதையை காட்டலாம்


இன்றைய இளைய சமுதாயம் தோல்வியை தாங்கும் மனதை இழந்து வருகிறது, தாங்கள் செய்யும் செயலில் தோல்வி அடைந்தால் உடனே அதிலிருந்து பின்வாங்கின்றனர். முதல் முயற்சியால் வெற்றியை கண்டவர் வெகுச்சிலரே, அடுத்தடுத்த முயற்சியில் வெற்றியை கண்டவர்கள் இங்குப்பல கோடியுண்டு, தோல்வியால் முயற்சியிலிருந்து பின்வாங்கி விதியை குறைகூறுபவர் மூடரே! துவள வேண்டாம் அன்பர்களே! வெற்றி உங்கள் அருகில்!!!

அன்புடன்
ஆயிஷாபாரூக் 

35 comments:

  1. அருமை ஆயிஷா ...

    ReplyDelete
    Replies
    1. தோழரின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி

      Delete
  2. தோல்விகளின் வரவு
    வெற்றிகளை பெருக்கலாம்
    வாழ்வின் பயணம்
    உண்மையை உணர்த்தலாம்


    சிறந்த தன்னம்பிக்கை வரிகள்..! கவிதை மனதை கவர்ந்தது..!!

    பகிர்வுக்கு நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. தோழரின் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி...

      Delete
  3. தெளிவூட்டிப் போகும்
    நம்பிக்கையூட்டிப் போகும்
    அருமையான கவிதை
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா! உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி

      Delete
  4. ஒவ்வொரு வரியும் மிக நம்பிக்கை தரும் வரிகள்..பள்ளி புத்தகங்களில் வாழ்க்கைக்கு உதவாத பழம் கவிதைகளை போடுவதற்கு பதிலாக இந்த கவிதையை பள்ளி புத்தகங்களில் சேர்க்கலாம். மிக தரமான கவிதை பதிவிட்டதற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ! உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி

      Delete
  5. Replies
    1. நன்றி சகோ! உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி

      Delete
  6. உங்கள் வரிகள் எங்கள் மனதினைத் திறந்து,
    வெற்றியின் வழியைக் காட்டியுள்ளுது...

    வாழ்த்துகள்...

    ReplyDelete
  7. இந்த கவிதை வாழ்வின் எதார்த்தம்... இதை ஏற்றுகொண்டால்... துன்பம் என்பது மேகம் போல கலையும்... கானல் நீர் போல விலகும்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ! உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி

      Delete
  8. அழகான கவிதையும் அழகான ஆலோசனையுடன் கூடிய விளக்கமும்.நிச்சயமாக சிலர் இப்படியும் கூறிக் கொள்கிறார்கள்

    "என்னால் முடியும் நான் ஒரு வெற்றியைக் கண்டவனல்ல ஆயிரம் தோல்விகளைக் கண்டவன்"

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ! உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி

      Delete
  9. நம்பிக்கை தரும் வரிகள் தொடருங்கள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ! உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி

      Delete
  10. சிறப்பான தன்னம்பிக்கை வரிகள்... விரும்பிப் படித்தேன்... நன்றி...

    ReplyDelete
  11. மிகசிறந்த இடுகை பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் முதல் வருகையை இனிதே வரவேற்கிறேன், உங்களின் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

      Delete
  12. இப்படி நம்பிக்கை கொடுக்க இருந்தாலே போதுமே !

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி. தோழி ஹேமா....

      Delete
  13. Replies
    1. மன்னிக்கவும் சூப்பர் நண்பி.. ஓ கே...

      Delete
    2. உங்களின் முதல் வருகையை இனிதே வரவேற்கிறேன், உங்களின் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

      Delete
  14. அருமையான தன்னம்பிக்கையைத் தூண்டும் கவிதை.
    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அம்மா, உங்களின் முதல் வருகையை இனிதே வரவேற்கிறேன், உங்களின் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

      Delete
  15. அருமையான கவிதை டீ....

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் டி...எஸ்தர்!

      Delete
  16. அன்புள்ள ஆயிஷா,

    உங்களின் பதிவுகளை இன்றைய வலைச்சரத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

    இணைப்பு இதோ:

    http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_12.html

    வருகை தருக, ப்ளீஸ்

    ReplyDelete
    Replies
    1. அம்மா, உங்களின் பகிர்வுக்கும் அறிமுகத்திற்கும் மிக்க நன்றி.. மகிழ்ச்சி..

      Delete
  17. எனது வரிகள்
    மனமதை திறக்கலாம்

    அருமையான கவிதை.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  18. அன்பின் ஆயிஷா ஃபாருக் - தன்னம்பிக்கைக் கவிதை - செயல்க்ளின் முடிவு என்ன என்பதனை அழகாக கவிதை ஆக்கியது நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete