August 21, 2012

விடை தேடும் காதல்......




என் உலகம் நீயென
உன் உயிராய் நான்யென
சுழன்றிடும் காலம் நேரம்
நீண்டு விடும் இரவும் பகலும்
பூத்திடும் பூக்கள் யாவும்
வீசிடும் வாசம் ஒன்றாய்
பாடிடும் குயில்கள் யாவும்
இசைத்திடும் ஓசை ஒன்றாய்
உன்பெயரை தினம்சொல்லி
தவமிருக்கும் என் இதயம்
அறியாத மொழிகளெல்லாம்
புரிந்து போன காலங்கள்
உன்முகம் அனுதினம் காண
ஏங்கித்தவிக்கும் என் கண்கள்
சொல்லாத காதல் எல்லாம்
சொல்லி விடும் மாயங்கள்
பல எழுத்து இருந்தாலும்
இனித்திடும் உன் பெயர்தான்
உயிர் கொண்ட முகவரியாய்
என் பின்னே உன் பெயர்தான்
வாழ்ந்திடும் வாழ்வுமுழுதும்  
உன்துணையாய் அருகில் நான்
காலங்கள் கடந்து போகும்
மாறாத அன்புடன் நான்
உனக்காகவே பிறந்தேன் என்று
உயிர்நீங்கும் வரை உரைப்பேனே
அன்றாவது என் காதலை
உந்தன் மனம் உணர்ந்திடுமோ  
சொல்லவிடு என் அன்பே
உயிர்விடுகிறேன் மறுகணமே…...

ஆயிஷாபாரூக்




22 comments:

  1. Replies
    1. தோழரே! உங்களின் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி..

      Delete
  2. அருமை வரிகள்... வாழ்த்துக்கள்...

    தொடருங்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. சகோ! உங்களின் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி..

      Delete

  3. காதலின் தீவீரம் குறித்துச் சொல்லிப்போகும்
    கவிதை அருமையிலும் அருமை
    மனம் கவர்ந்த படைப்பு

    ReplyDelete
    Replies
    1. அய்யா! உங்களின் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி..

      Delete
  4. அழகான காதல் கவிதை...
    வாழ்த்துக்கள் நட்பே.

    ReplyDelete
    Replies
    1. சகோ! உங்களின் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி..

      Delete
  5. உந்தன் மனம் உணர்ந்திடுமா.... என்னால் உணர முடிகிறது சகோ. அருமையிலும் அருமையான வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. சகோதிரி! உங்களின் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி..

      Delete
  6. அருமையான காதல் கவி சொந்தமே!அருமை அருமை!சந்திப்போம்.!

    ReplyDelete
    Replies
    1. சகோதிரி! உங்களின் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி..

      Delete
  7. பல எழுத்து இருந்தாலும்
    இனித்திடும் உன் பெயர்தான்
    உயிர் கொண்ட முகவரியாய்
    என் பின்னே உன் பெயர்தான்

    அருமையான காதல் கவிதை தோழி...
    தொடருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்களின் இந்த முதல் வருகையை இனிதே வரவேற்கிறேன், தோழமையே! உங்களின் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி..

      Delete
  8. அருமையான காதல் கவிதை! நன்றி!

    இன்று என் தளத்தில்
    கோயில்களில் கொள்ளையும் பக்தர்கள் வேதனையும்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_22.html
    ஒரு வில்லன்! ஒரு ஹீரோயின்! ரெண்டு ஹீரோக்கள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4096.html

    ReplyDelete
    Replies
    1. சகோ! உங்களின் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி..

      Delete
  9. யாரையுமே விட்டு வைக்காத காதல்.........!

    ReplyDelete
    Replies
    1. மனிதனாக பிறந்தால் காதல் கொள்ள வேண்டும்... காதல் எங்கும் ஊடுருவும். உங்களின் இனிய வருகைக்கும் பதிவிற்கும் நன்றி சகோ!

      Delete
  10. அடிமையாகி கிடக்கிறது உன் சொல் வளைவுகளில் என் கண்களும் மனசும் கூட அருமையான உண்மைகள் ஆயிசா

    ReplyDelete
    Replies
    1. உங்களின் இனிய வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி தோழரே!

      Delete
  11. எவ்வளவு உணர்வுப் பூர்வமான கவிதை .. வரிகள் அனைத்தும் அருமை !

    பல எழுத்து(கள்) இருந்தாலும் இனித்திடும் உன் பெயர்தான் என்ற வரி சூப்பர் !!!

    ReplyDelete
    Replies
    1. அன்பு தோழரின் வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி!

      Delete