August 26, 2012

வேண்டாம் தூக்குகயிறு




இறைவன் படைத்த உயிரை எடுக்க எந்த மனிதருக்கும் உரிமை கிடையாது. ஆனால் இங்கு மனிதன் மனிதனையே அழிக்கிறான். மனிதனே மனிதனுக்கு எதிராக குற்றங்களை விளைவிக்கிறான்.மனிதன் செய்யும் குற்ற செயல்களை கட்டுப்படுத்த மனிதனே வகுத்தது தான் விதிகளும், தண்டனைகளும். மரண தண்டனைகள் மூலமாக சமூகத்தில் குற்றங்கள் குறைக்கப்படும் என்றால் ஏன் குற்றங்கள்  அதிகரித்தக்கொண்டே வருகிறதுகாந்திய கொள்கையான அஹிம்சா வழியை கடைபிடிக்கும் இந்தியாவில் மரண தண்டனை நீக்கப்பட வேண்டும் என்பது பல கோடி இந்தியர்களின் விருப்பம். உலகில் தற்போது ஐம்பத்தி எட்டு நாடுகள் மரண தண்டனையை சட்டப்படி தண்டனையாக வைத்துள்ளது. தொனுற்றி ஏழு நாடுகள் மரணதண்டனையை நீக்கிவிட்டன. பல நாடுகளில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்ட நிலையிலும், மிகுதியான மக்கள் தொகை கொண்ட நாடுகளான மக்கள் சீன குடியரசு, இந்தியா, அமெரிக்கா மற்றும் இந்தோனேஷியா நாடுகளில் மரண தண்டனை செயலில் உள்ளது. 

அரிதான நிகழ்வுகளில் மிக அரிதாக மட்டுமே மரணதண்டனை வழங்கிட வேண்டும் என்று 1983 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இந்தியாவில் மரண தண்டனை தூக்கில் இட்டு கொல்வது மூலம் நிறைவேற்றப்படுகிறது. ஏப்ரல் 27, 1995 ஆட்டோ சங்கர்  சேலம், தமிழ்நாடு மாநிலத்தில் தூக்கிலிடப்பட்ட பின்பு 1990 ல் ஒரு பள்ளி மாணவியை கற்பழிப்பு செய்து கொலை செய்த குற்றத்திற்காக தனன்ஜாய் சாட்டர்ஜி, என்பவருக்கு ஆகஸ்ட் 2004 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதன் பிறகு இன்று வரை மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் யாருக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை.

இந்திய சட்டத்தின் கீழ், மரண தண்டனை கீழ் வரும் நிகழ்வில் உள்ள குற்ற செயல்களுக்கு விதிக்கப்படுகிறது:-
  • கொலை.
  • கொள்ளையுடன் சேர்த்து கொலை.
  • ஒரு குழந்தை அல்லது மனநலம் பதித்த நபரின் தற்கொலைக்கு உடந்தையாக செயல்பட்டது.
  • அரசாங்கத்திற்கு எதிராக போர் தொடுத்தது.
  • ஆயுத படைகளின் உறுப்பினராக இருந்து கலகத்திற்கு உடந்தையாக இருந்தது.
  • தற்போது பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது மரணதண்டனை விதிக்கபடுகிறது. 
நான்கு வகையான நபர்கள் மரணதண்டனையிலுருந்து விலக்க உட்பட்டவர்கள்.
  • 15 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகள் 
  • கர்ப்பிணி பெண்கள்,
  • மனநல நோயாளிகள்
  • 70 வயது கடந்தவர்கள். 
மரணதண்டனை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடுகள் செய்தப்பிறகு நிராகரிக்கப்பட்ட நிலையிலும் ஜனாதிபதியிடம் தண்டனை விலக்க கோரி கருணை மனு அளிக்கலாம். அவரின் முடிவே இறுதியானது. இந்திய ஜனாதிபதியாக இருந்த பிரதீபா பாட்டீல் தனது ஐந்து ஆண்டு பதவி கால இறுதியில் அதாவது ஜூன் 2012, முப்பத்தி ஐந்து மரணதண்டனை கைதிகளை ஆயுள் தண்டனையாக மாற்றியமைத்தார். வீரப்பன் வழக்கு, ராஜீவ் காந்தி கொலை வழக்கு, மும்பை தாக்குதல், டெல்லி நாடாளுமன்றம் தாக்குதல் என்று இதில் ஈடுபட்ட குற்றவாளிகளின் முடிவுகள் உட்பட இருபத்தி ஆறு கருணை மனுக்கள் இந்திய ஜானதிபதி அவர்களின் கருணைக்காக நிலுவையில் உள்ளது.

இந்திய குற்றவியல் நடைமுறை சட்ட படி பல்வேறு குற்றங்கள் எட்டு பிரிவுகள் (121, 132, 194, 302, 303, 305, 307, மற்றும் 396) கீழ் மரணதண்டனை அங்கீகரிக்கிறது.

அடிப்படை மனித உரிமையான "மனிதன் வாழும் உரிமையை" பறிப்பதாகும்.  தூக்கு தண்டனை மூலம் குற்றவாளிகள் தங்களின் தவறை உணர வாய்ப்பு இல்லை. தண்டனை நிறைவேற்றப்படும் காலம் வரை வருந்தி அதை உணர்ந்து திருந்தி வாழவும் வாய்ப்பு கிடைக்காது. மேலும் அந்த குற்றத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இவர்களின் மரணத்தால் இந்த பயனும் கிடையாது. குற்றவாளிகளின் உறவுகளுக்கும் இவர்களின் இழப்பு பாதிக்கும். மரணம் என்பது குற்றவாளிகளின் தவறிலிருந்து விரைவாக தப்பிக்க வைக்கக்கூடும். ஆயுள் தண்டனை மூலம் தங்களின் தவறை உணர்ந்து குற்றவாளிகள் திருந்தி வாழ வாய்ப்பு உள்ளது. மரணத்தை விட கொடியது ஒருவர் சிறையில் தனிமையில் பல காலம் தண்டனை அனுபவிப்பது என்பது என் கருத்து. மரணதண்டனை ஆயுள் தண்டனையாக மாற வேண்டும் என்பது என்னை போன்ற பலரின் விருப்பம்.
 
அன்புடன்
ஆயிஷாபாரூக்

28 comments:

  1. மிக அருமையான பதிவு சகோதரி !!! மரண தண்டனை என்பது கொடுஞ்செயல் .. தண்டனைகளைக் குறைக்க என நொண்டிச்சாக்கு சொன்னாலும், பல நேரங்களில் அப்பாவிகளும், பலமில்லாத குற்றவாளிகளும் தான் பலியாக்கப்படுகின்றார்கள் ... ஒரு உயிர் என்பது அரிதானது, அதிலும் ஒரு மனித உயிரைக் கொல்ல நினைப்பது கொடூரமான செயல். நாய் கடிக்கின்றது என்பதால் திருப்பி நாயைக் கடிக்கலாமா ? கொலை செய்கின்றான் எனில் திருப்பி அவனைக் கொல்லலாமா ?

    வேண்டும் எனில் நாடுக்கடத்தி தீவில் கொண்டுப் போய் வைக்கலாமே !!! தயவு செய்து கொலைக்கு தீர்வு கொலை ஆகாது என்பத எனது கொள்கையுமாகும்.

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோதரரின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. கொலைக்கு கொலை தீர்வு ஆகாது, பழிக்கு பழி என்கிற கூற்றே மனிதனை மிருகமாக மாற்றம். மனிதநேயம் தழைத்திட நாம் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.

      Delete
  2. அன்பு சகோ.,

    உங்கள் பதிவின் சாரம்சம் கொலைக்கு கொலை தீர்வாகாது என்பதே.. நிதர்சனமாக சிந்தித்து பார்த்தால் இது உணர்ச்சிப்பூர்வமாக எடுக்கப்பட்ட முடிவுகளின் கீழாக தான் வரும். ஒருவனுக்கு தூக்கு கொடுப்பது அவனது (தனி மனித) உரிமையை பறிப்பதாக சொன்னால் அவனால் கொல்லப்பட்டவனுக்கும் அதே உரிமை இருக்கத்தானே செய்யும். அவ்வுரிமையே ஏன் பறிக்க வேண்டும் சகோ?

    இங்கே கொலைக்கு (சூழ்நிலையால் ஏற்பட்டதன்று, மாறாக திட்டமிட்டு வேண்டுமென்றே) பதில் கொலை தான் என்பதை ஆணித்தரமாக எந்த சட்டமும் அமல் படுத்தினால் - தாம் கொலை செய்தால் கொல்லப்படுவோம் என்ற நிலையில் ஒருவன் எப்படி கொலை செய்ய நாடுவான்? இதுதான் கொலைக்குக் கொலை என்ற சட்டத்தின் ஆணிவேர். ஆனால் அது இன்று போலி மனிதாபிமானம், செல்வாக்கு, பிழைப்பு வாத அரசியலால் குற்றங்கள் குறைவதற்கு பதிலாக குற்றவாளிகள் அதிகரிக்கின்றனர்.

    ஒரு வார்த்தை சகோ., எந்த ஒரு சம்பவமும் இரு முனைகளை கொண்டது. பொது பார்வையில் மரணத்தண்டனையை எதிர்க்கும் நாம் கொலையுண்டவனின் குடும்ப உறவாய் நின்று யோசித்தால் அதை மறுப்பதற்கில்லை. நீங்களே பாருங்கள் இறைவன் படைத்த உயிரை எடுக்க எவருக்கும் உரிமை கிடையாது என்றே தொடங்கி இருக்கிறீர்கள். அப்படியிருக்க மரணதண்டனை வழங்க மனிதனுக்கு உரிமை இல்லையென்றால் தன்னை போன்ற பிறிதொருவனை கொல்லும் உரிமை மட்டும் அவனுக்கு வழங்கியது யார் ?

    மாற்றுக்கருத்துகள் இருப்பீன் மற்றவை பிற
    உங்கள் சகோதரன்
    குலாம்

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோதரரின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.

      - கொல்லப்பட்ட நபருக்கு - கொலை செய்த குற்றவாளிக்கு மரணதண்டனை விதிப்பது மூலம் உயிர் திரும்பி வருமா? இல்லை பாதிகப்பட்ட கொலையுண்ட நபர் குடும்பத்திற்கு எதனால் எதுவும் ஆதாய பலன் உண்டா? இல்லை குற்றவாளியின் குடும்பத்திற்கு மரணதண்டனை விதிப்பது மூலம் எதுவும் ஆதாய பலன் உண்டா? ..... குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் மரணதண்டனை மூலம் அல்ல... மரணம் மூலம் அவர் வருந்தவோ இல்லை திருந்தவோ வாய்ப்பு இல்லை... வாழ்வின் தண்டனையில் இருந்து சீக்கிரம் தப்பிக்க அவருக்கு ஒரு சந்தர்ப்பம் மரணதண்டனை. இதே ஆயுள் தண்டனை என்றால் அவர் காலம் முழுதும் வருந்தி திருந்தி வாழ வாய்ப்பு உள்ளது என்பது என் கருத்து..

      Delete
  3. வணக்கம் சகோ,

    நல்ல பதிவு. இறைவனின் படைப்பு என்பதை நாம் ஏற்பது இல்லை என்றாலும் மரண தண்டனை என்பது நாகரிகமற்ற சட்டம் என்பது நம் கருத்து.
    ஒருவேளை ம்ரண தண்டனைக்கு உரிய குற்ற வாளில் சமூகத்தில் இருப்பது அனைவருக்கும் ஆபத்து என்றால் கூட அவருக்கு 100 வருட தண்டனை என தடுப்புக் காவலில் வைத்து விடலாம்.

    மரணத்தை விட ,உயிர் வாழ்தலே கடினம்.நிச்ச்சயம் இறக்கும் வரை சிறையில் இருக்க வேண்டிய ஒரு மனிதன் தான் செய்த தவறை ஒரு கண்மேனும் யோசித்துப் பார்ப்பான்.
    ********
    சகோ குலாம்,

    இஸ்லாமில் எதிலும் குறுக்கு வழி உண்டு என்பதுதான் நாம் வைக்கும் குற்றச்சாட்டு!!!!

    ஷாரியா சட்டத்தின் படி கொலைக்கு கொலை அனைவருக்கும் என்றால் கூட பரவாயில்லை,இரத்தப்பணம் என்ற குறுக்கு வழி வைத்து பணக்காரன் மட்டும் தப்பிக்கவும்,ஏழை மட்டும் சாவதற்கு வழி வகுப்பதுதான் இறை சட்டமா!!!!

    இரத்தப் பணத்திலும் மதம் சார்ந்து உயிருக்கு விலை!! அபாரம்!!!

    http://en.wikipedia.org/wiki/Diyya
    In Saudi Arabia, when a person has been killed or caused to die by another, the prescribed blood money rates are as follows[8]:
    300,000 riyals if the victim is a Muslim man
    150,000 riyals if a Muslim woman
    150,000 riyals if a Christian or Jewish man
    75,000 riyals if a Christian or Jewish woman
    6,666 riyals if a man of any other religion
    3,333 riyals if a woman of any other religion
    The amount of compensation is based on the percentage of responsibility. Blood money is to be paid not only for murder, but also in case of unnatural death, interpreted to mean death in a fire, industrial or road accident, for instance, as long as the responsibility for it falls on the causer.

    இது உங்களுக்கு சரியாகப் பட்டே ஆக வேண்டும் அப்போது மட்டுமே முஸ்லிம்.இல்லை என்றால் ஹி ஹி

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. சட்டம் என்பது யாவருக்கும் சமம், ஏழைக்கு பணக்காரனுக்கு ஒரு சட்டம் என்றால் அது சட்டம் கிடையாது, நீதி கிடையாது.. உங்களின் கூற்றை ஏற்கிறேன். உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி!

      Delete
  4. கொலைக்கு கொலை தீர்வே ஆகாது !!! சிலர் மதம் கூறிவிட்டதால் அதற்கு ஆதரவு சொல்கின்றார்கள் .... !!!

    உண்மையில் மக்களை பக்குவப்படுத்தவே சட்டங்களும், மதங்களும் ஆனால் நிதர்சனத்தில் மக்களை பக்குவப்படுத்துவதில்லை மாறாக அவை அச்சத்தினை விளைவித்து அதனூடாக குற்றங்களைக் குறைக்கலாம் எனக் கருதுகின்றது. இதேக் கொள்கையை ஸ்டாலின், போல் போட், ஹிட்லர் போன்ற் கொடுங்கோலார்களும் பயன்படுத்திப் பார்த்தார்கள். ஆனால் அவை வெற்றியளிக்கவே இல்லை என்பது தான் உண்மையே.

    ஷரியா சட்டங்களில் உள்ள ஓட்டைகளை சார்வாகனே விளக்கிவிட்டார் என்பதால் அவற்றைப் பேச வேண்டியதில்லை ...

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோதரரின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.

      குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் மரணதண்டனை மூலம் அல்ல... மரணம் மூலம் அவர் வருந்தவோ இல்லை திருந்தவோ வாய்ப்பு இல்லை... வாழ்வின் தண்டனையில் இருந்து சீக்கிரம் தப்பிக்க அவருக்கு ஒரு சந்தர்ப்பம் மரணதண்டனை. இதே ஆயுள் தண்டனை என்றால் அவர் காலம் முழுதும் வருந்தி திருந்தி வாழ வாய்ப்பு உள்ளது என்பது என் கருத்து..

      Delete
  5. வணக்கம் சகோ.

    சிறந்த பதிவு ,கொலைக்கு கொலை தீர்வாகாது என்பதே எம் கருத்தும். மதங்கள் கூறுகின்றதே என்பதை ஏற்பது மடமை. ஒரு குற்றவாளியை அவன் குற்றம் செய்தான் என்பதை நிரூபிக்க மதம் கூறும் நிரூபணம் என்ன? எடுத்துக்காட்டாக கற்பழிப்பு குற்றத்திற்கு சம்மந்தப்பட்டவரை அவன் தான் கற்பழித்தான் என்பதற்கு எதை வைத்து மதம் தீர்ப்பு சொல்லும்? வெறும் சாட்சிகளை வைத்து சரியான தீர்ப்பை வழங்கிவிட முடியுமா? கொலைக்கு கொலை அன்றோடு அவனது தண்டனை வாழ்வு முடிந்துவிடுகிறது.ஆனால் வாழ்நாள் முழுதும் சிறை என்பது வாழ்நாள் முழுதும் தண்டனையாகிறது. இனி வாழ்வு சிறைதான் என்பதைவிட கொடுமையான தண்டனை வேறெதுவும் இல்லை என்பதே என் கருத்து.

    இனியவன்...

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோதரரின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. உங்கள் கருத்தை வரவேற்கிறேன்..
      குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் மரணதண்டனை மூலம் அல்ல.மரணம் மூலம் அவர் வருந்தவோ இல்லை திருந்தவோ வாய்ப்பு இல்லை.வாழ்வின் தண்டனையில் இருந்து சீக்கிரம் தப்பிக்க அவருக்கு ஒரு சந்தர்ப்பம் மரணதண்டனை. இதே ஆயுள் தண்டனை என்றால் அவர் காலம் முழுதும் வருந்தி திருந்தி வாழ வாய்ப்பு உள்ளது என்பது என் கருத்து.

      Delete
  6. விரிவான விளக்கங்கள்...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்தை வரவேற்கிறேன், அன்பு சகோதரரின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.

      Delete
  7. அருமையான பதிவு! எனது கருத்தும் இதுவே! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்தை வரவேற்கிறேன், அன்பு தோழியின் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.

      Delete
  8. உயிரின் மதிப்பை மிக அருமையாக உணர்த்தும் பதிவு.....

    வாழ்த்துக்கள் ஆயிஷா !!

    ReplyDelete
    Replies
    1. தோழரின் வருகைக்கு நன்றி...உங்களின் பதிவிற்கும் நன்றி!

      Delete
  9. Arumayana padhivugal. Ungal Karuthai nanum varaverkiren.

    Regards,
    Jagan K
    Live Positive Way

    ReplyDelete
    Replies
    1. தோழரின் வருகைக்கு நன்றி...பதிவிற்கும் நன்றி!

      Delete
  10. மிக அருமையான பதிவு..

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்தை வரவேற்கிறேன். உங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  11. அருமையான பகிர்வு! என் கருத்தும் இதுதான்! மரணம் என்பது தண்டனையல்ல! மனிதாபிமானத்துடன் விடுவிப்பதே அவர்களுக்கு தண்டனையாக அமையும்!
    இன்று என் தளத்தில்
    நினைவுகள்! கவிதை!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_27.html
    நடிகை சுஜிபாலா தற்கொலைமுயற்சி காரணம் இயக்குனரா?
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_3738.html

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்தை வரவேற்கிறேன். உங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  12. Arumayaana pathivu thozhi.... Ungal karuththai mutrilumaaga varavetkiren. Kutrangale olikkap padavendum. Kutravaaligal alla.... Thamathathukku mannikkavum..

    ReplyDelete
    Replies
    1. குற்றங்களும் கலையப்படவேண்டும், குற்றவாளிகளும் தண்டிக்க பட வேண்டும்... உங்களின் கருத்தை வரவேற்கிறேன். உங்கள் வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  13. பாரிய முன்னேற்றம்
    தங்கை.
    மறுக எதிர் பார்க்கின்றேன்.
    என்றும்
    உன் அன்புள்ள அண்ணன் யாழகிலன்.

    ReplyDelete
    Replies
    1. அன்பு அண்ணன், வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி!

      Delete
  14. நிச்சயம் ஆழயோசித்த பதிவு.மரணத்திற்கு மரணமே தண்டனையா !

    ReplyDelete
  15. மனிதர்கள் எந்த செயலை செய்வதற்கும்
    இரண்டு குணங்கள்தான் காரணிகளாக உள்ளன

    ஒன்று விருப்பு மற்றொன்று வெறுப்பு
    விரும்பியதற்கு தடை ஏற்பட்டால்
    வெறுப்பு தோன்றும்
    வெறுப்பு எதில் வேண்டுமானாலும் சென்று முடியும்
    கொலை உட்பட

    வள்ளலாரின் நெறியை மனிதர்கள் கடைபிடித்தால் அதாவது ஆருயிர்கெல்லாம் நான் அன்பு செய்ய வேண்டும் என்ற நெறி.

    விருப்பு வெறுப்பின்றி மனிதர்கள் வாழ பழகிகொண்டால் நன்மை விளையும்.

    பிறக்கும்போதே ஒரு உயிரின் மரணம் நிச்சயிக்கப்பட்டு விடுகிறது.
    அது எந்த வகையில் என்பதை இறைவன் ஒருவனே அறிவான்.

    இந்த உண்மையை உணர்ந்தவர்கள் மற்றவர்களின் உயிரை போக்க முற்படமாட்டார்கள்.

    அப்படிப்பட்ட மனிதர்கள் பல கோடிகளில் ஒருவர் தான் இருப்பார்.

    ReplyDelete