December 13, 2012

தீண்டாமல் சுடுகிறாய்

 

உன் நினைவினில்
தினம் மூழ்கி
மனம் உருகினேன்
-----------------------------
உன் பிரிவில்
தினம் வாடி
உடல் மெலிந்தேன்
-----------------------------
உன் கனவில்
தினம் வாழ்ந்து
ஏக்கம் தீர்க்கிறேன்
-----------------------------
உன் சிந்தையில்
தினம் நனைந்து
கவி எழுதினேன்
------------------------------
உன் வாழ்வில்
தினம் சேர
தவம் புரிகிறேன்
-----------------------------
உன் காதலினால்
தினம் வாழ்கிறேன்
உயிர் பெறுகிறேன் 

அன்புடன்
ஆயிஷாபாரூக்

 

24 comments:

  1. உன் சிந்தையில்
    தினம் நனைந்து
    கவி எழுதினேன் ....

    எத்தினை உண்மையான வரிகள். சோ ஸ்வீட்..

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...

      Delete
  2. உன் சிந்தையில்
    தினம் நனைந்து
    கவி எழுதினேன் //

    இதுபோல ஒவ்வொரு வரிகளும் அழகானவை சகோதரி. அழகிய கவிதை.

    ReplyDelete
  3. அழகான கவிதைக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. லக்ஷ்மி அம்மா உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...

      Delete
  4. வார்த்தையால் உயிர்பெற்ற உங்கள் கவிதைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...

      Delete
  5. உன் காதலினால்
    தினம் வாழ்கிறேன்
    உயிர் பெறுகிறேன் .
    வரிகளும் உயிர் பெற்றன சகோ.

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோ! உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...

      Delete
  6. அருமை! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோ! உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...

      Delete
  7. ஒவ்வொரு வரிகளும் உயிர்ப்பானவை ஆயீஷா. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அன்பு ரஞ்சனி அம்மா... உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...

      Delete
  8. காதல் சொட்டுக்கள்.அருமை ஆயிஷா !

    ReplyDelete
  9. நண்பரே ..உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு உள்ளேன்..நேரமிருந்தால் பார்க்கவும்...http://blogintamil.blogspot.com/2012/12/blog-post_15.html

    ReplyDelete
    Replies
    1. அன்பு தோழரே... உங்களின் அன்பான அறிமுகத்திற்கு மிக்க நன்றி.. கண்டேன்.. மகிழ்ச்சி...உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி.

      Delete
  10. Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி.

      Delete
  11. வலைச்சரத்தில் இன்று அறிமுகம் ஆகியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். உங்களின் ரசிகை என்ற முறையில் மிகவும் பெருமைப் படுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நானும் உங்கள் ரசிகை தான் அம்மா... உங்களின் அன்புக்கு மிக்க நன்றி.. மிக்க மகிழ்ச்சி

      Delete
  12. அருமையான கவிதை ஆயிஷா.

    ReplyDelete
  13. nalla kavithai...suppara irukuuu

    ReplyDelete