November 19, 2012

காதல் தோல்வி எனக்கில்லை

காதல் தோல்வி
அடைந்த உன்னை
மனமார காதலிக்கிறேன்
அன்பின் ஆழத்தையும்
வலியின் வடுகளையும்
உறைந்த கண்ணீரையும்
சுமந்த உன் இதயம்
இனி ஏமாறக்கூடாது

மறந்து சென்றவளை
நினைக்கும் உன் மனம்
உனக்காக உருகி நிற்கும்
என்னை காணவில்லையா?

விலகி சென்றவளை
விரும்பும் உன் இதயம்
விழிப்பார்த்து உன்னை
வரவேற்கும் என் மனதை
உனக்கு புரியவில்லையா?

காதல் தோல்வியின்
வலியை அறிந்த நீ
எனக்கும் அந்த வலியை
தருவது முறையோ
ஆருயிரே! என்னுயிரே!

வாழ்வும் மரணமும்
உன்னுடன் என
வந்துவிட்ட எனக்கு
உன்னுடைய எந்த பதிலும்
காதல் சம்மதம் தான்

அன்புடன்
ஆயிஷாபாரூக்

9 comments:

  1. அட..... அசத்தல் - வலிக்கு நிவாரணியா

    ReplyDelete
  2. வலி பட்ட மனதிற்கு நல்லதொரு மருந்து...

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...

      Delete
  3. வித்தியாசமான காதல், அருமையா இருக்கு.

    ReplyDelete
  4. வித்தியாசமாக சிந்தித்து
    அருமையாகப் படைத்துள்ள கவிதை
    மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. காதல் வலியில் சுகம் காண்கிறீர்கள்.

    வித்தியசமானப் படைப்பு.
    வாழ்த்துக்கள் ஆயிஷா.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி...

      Delete
  6. காதல் சம்மதம் தான்...

    ReplyDelete