December 10, 2013

வேலை இடத்தில் பெண்கள் பாலியல் தொல்லைகளை எதிர்க்கொள்வது எப்படி ? Handling Sexual Harassment at Workplace

பணியிடங்களில் பெண்கள் சந்திக்கும் பாலியல் தொல்லைகள்




மூன்றில் ஒரு பங்கு பெண்கள் அலுவலகத்தில் அல்லது வேலை செய்யும் இடத்தில பாலியல் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர். தங்களின் பொருளாதார நிலையை மேன்படுத்தவும், தங்களின் வாழ்வாதார நிலையை சரிசெய்யவும் சில பெண்கள் வேலைக்கு செல்கின்றனர். ஒரு சில குடும்பங்கள் வேலைக்கு செல்லும் பெண்களின் வருமானத்தை நம்பியே உள்ளது.

குடும்ப சுமை, வாழ்கையில் நெருக்கடி போன்ற காரணங்களால் வேலைக்கு செல்லும் பெண்கள் இதுபோன்ற பாலியல் தொல்லைகளை அனுசரித்து செல்லவேண்டிய அவலம் உள்ளது. இங்கே பாலியல் தொல்லை என்பது என்ன ? கற்பழிப்பா... ! வார்த்தை மூலமாக, செய்கை மூலமாக கூட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கலாம். பெண்ணின் அங்கங்களை வர்ணிப்பதாக இருக்கட்டும், பெண்ணை கண்டு ஆபாச செய்கைகள் செய்வதாக இருக்கட்டும் அது பாலியல் தொல்லையே. சில ஆண்கள் பெண்கள் இருக்கும் இடம் என்று கூட கருதாது ஆபாச வார்த்தைகள், கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தும் போது பெண்களின் முகம் கூனி குறுக்கி கூட போவதுண்டு. அதை கண்டு சிரித்து ரசிக்கும் ஆண்களும் உண்டு.

பணியிடங்களில் தங்களுக்கு கீழ் வேலை பார்க்கும் பெண்களை பதமிட விரும்பாத ஆண்கள் சராசரியாக குறைவே. சிலர் மேல் அதிகாரிகளுக்கு பணிந்தால் மட்டுமே சலுகைகள், சம்பளம் மற்றும் பதவி உயர்வு போன்றவை எளிதாக பெறமுடியும். பெண்கள் அனைவரும் காம இச்சைகளுக்கு பணிவார்கள் என்றும் கருத முடியாது. ஒரு சில பெண்கள் ஒத்துபோவதால் மற்ற பெண்களையும் சரிசெய்து தங்கள் வழிக்கு கொண்டு செல்லாம் என்கிற நினைப்பில் சில மேல் அதிகாரிகள் கைவரிசை காண்பித்து வேலையிலிருந்து வெளியேறியே சம்பவங்களும் உண்டு. வேலையில் பெண்களுக்கு பாலியல் அச்சுறுத்தல் என்பது அணைத்து துறைகளிலும் உள்ளது. கீழ் நிலை பணியில் உள்ள பெண்களுக்கு மட்டும் இந்த கொடுமை என்றில்லை மேல்நிலை பணியில் உள்ள பெண்களும் இது போன்ற வேலை பணியிடங்களில் பாலியல் தொல்லை ஆளாக நேரிடுகிறது.




வேலை இடத்தில் பெண்கள் பாலியல் 
தொல்லைகளை எதிர்க்கொள்வது எப்படி ?




·        தொழில் சார்ந்த அடையாளத்தை பராமரிக்கவும் :  வேலை இடங்களில் தொழில் முறை சார்ந்த கண்ணியமிக்க ஆடைகளை உடுத்தவேண்டும். பிறரின் கவனம் உங்கள் மீது ஈர்க்கும் வகையில் கவர்ச்சிகரமான ஆடைகளை  அலுவலகத்தில் உடுத்த கூடாது. ஆடை சுதந்திரம் அவரவர் விருப்பமே, இருந்தும் எந்த ஆடை எந்த இடத்தில யார் முன் உடுத்தப்பட வேண்டும் என்கிற வரைமுறை அனைவருக்கும் உள்ளது என்பதை கவனத்தில் கருத வேண்டும்.
·        மோசமான கருத்துக்கள் அல்லது வக்கிரமான நகைச்சுவை :- மோசமான கருத்துக்கள் அல்லது வக்கிரமான நகைச்சுவைகளை வேலை செய்யும் நபர்கள் உங்களிடம் பேச அனுமதிக்காதீர்கள். இது போன்ற செயல்களுக்கு கடுமையுடன் நடந்துக்கொள்ளுங்கள், இது போன்ற நிகழ்வுகளுக்கு சிரிக்கவோ அல்லது பதிலளித்து ஊக்குவிக்க வேண்டாம். முதலில் கண்டிப்புடன் பிறகு இந்த செயல் தொடர்ந்தால் உயரதிகாரிகளிடம் புகார் தெரிவப்பது நல்லது.
·        தைரியமாகவும், தன்னம்பிக்கையாகவும் காணப்படுங்கள் :-அட்டூழியர்கள் மற்றும் வன்முறை நிகழ்த்தும் நபர்களின்  முன்பு மிகவும் தைரியமாகவும், தன்னம்பிக்கையுடன்   காணப்படுங்கள். அவர்களின் அச்சுறுத்தலுக்கு இணங்க வேண்டாம். அவர்கள் முன்பு நீங்கள் பயந்தது போல போல காட்ட வேண்டாம். அச்சப்படுவதன் மூலம் அவர்கள் உங்களை மீண்டும் அச்சுறுத்த அல்லது துன்புறுத்த வாய்ப்பு நேரிடும். மேற்கொண்டு இவர்களை பற்றிய புகாரை உயரதிகாரிகளிடம் அறிவிக்க வேண்டும்.
·        மேலதிகாரியே உங்களிடம் தவறாக நடந்தால் :- நீங்கள் வேலையில் பணிபுரியும் நபரால் பாதிப்புக்கு உள்ளாகும் போது, உங்களின் நெருங்கிய நம்பகம் மிகுந்த நட்பிடம் தெரிவிப்பது நல்லது. இது உங்களின் அச்ச உணர்வை சிறிது குறைக்கும். உங்களின் மேலதிகாரியே உங்களிடம் தவறாக நடந்தால் அதை பகிரங்கபடுத்துவது நல்லது. அவரின் செல்வாக்கு, சக்தி ஆகியவற்றை கருத்தில் கொண்டு பாலியல் அச்சுறுத்தல் அல்லது தொல்லை ஆதாரங்களுடன் சரியான நடவடிக்கையில் ஈடுப்பட வேண்டும், உரிய ஆதாரங்கள் இல்லாமல் போனால் நாம் தான் அதிகப்படியாக பாதிப்புக்கு உள்ளாவோம்.
·        வேலையில் பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவிக்கும் முறை வேலையில் பாலியல் துன்புறுத்தல் ஏற்படும் போது புகாரை எழுத்து மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாக உங்களின் மேலதிகாரிக்கு தெரிவிப்பது நல்லது. உங்கள் நிர்வாகத்தில் உள்ள ஒழுங்கு நடவடிக்கை குழு அல்லது காவல், நீதிமன்ற நடவடிக்கைக்கு இந்த ஆதாரங்கள் உதவும்.
·        வேலையில் இடத்தில குழுவாக இருத்தல்: தனியாக இருப்பதை தவிர்த்து உங்களின் நம்பகத்தன்மை கொண்ட நண்பர்கள் கூடிய குழுவாக இருந்தால் உங்களுக்கு மிகுந்த பலமாக அமையும். இது போன்ற நிகழ்வுகளில் நீங்கள் உங்களை தற்காத்துக்கொள்ள முடியும், மேலும் நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். உங்களின் புகாரும் வலுவு பெரும்.
 
இது போன்ற பாலியல் தொல்லைகள் அல்லது அச்சுறுத்தல் சம்பவங்கள் வேலை இடத்தில்  நடைபெறும் போது இத்தகைய  சம்பவங்களை வெளிச்சத்திற்கு வெளிக்கொண்டு வரும்போது  மற்ற பெண்களும் இத்தகைய சம்பவங்களில் இருந்து பாதிக்காமல் தப்பிக்க கூடும் என்று நினையுங்கள். அதிகப்படியான தொல்லைகள் இருப்பின் உங்களால் சமாளிக்க முடியாமல் போனால் உங்கள் வீட்டாரிடம் சொல்வது சிறந்தது மற்றும் பாதுகாப்பானது.

தொடரும்….

ஆயிஷாபாரூக்
www.ayeshafarook.blogspot.com
 

No comments:

Post a Comment