December 29, 2013

கவிதை மிக்ஸ்....

தாய்மை

 அர்த்தமில்லாத வாழ்கையும்
ஜீவனாகி போனது
கருவரையில் உன்னை
சுமந்த போது



உனக்குள் நான்...  
எழுதிய கவிதைகளிலும் நீ
எழுதுகின்ற வார்த்தைகளிலும் நீ
எழுதாத எண்ணங்களிலும் நீ
என்னை சுற்றி நினைவுகளாய் நீ
என்னை உனக்குள் தேடி தெரியும் நான்... 


 டிசம்பர் 26 - 2004   

கடலினை பார்த்த சந்தோஷம்
துள்ளிக் குதித்து கால் நனைக்க
கடல் அலையிடம் சென்றாள்
ஒருசேர உள்ளே அணைத்துவிட்டு
ஆர்பரித்தது ஆழிப்பேரலை
அசையாது ஒதுங்கினாள் பிணமாக
கரை முழுவுதும் துக்கம்....


புண்ணிய ஆத்மாக்கள் விவசாயிகள்..

உணவிற்கு நாம் உழைக்கலாம் ; 
உணவை உருவாக்க உழைக்கும்
புண்ணிய ஆத்மாக்கள் விவசாயிகள்......
மண்ணை பயிராக்கவும்
பஞ்சத்தை செழிப்பாக்கவும்
வறுமையை வளமையாக்கவும்
பசிபட்டினியை இல்லாமையாக்கவும்
தரணியை உயிராக்கவும்
நிலத்தினை செழிமையாக்கவும்
உயிர்களுக்கு உணவு அளிக்கும்
உயர்வான உன்னத பணிக்கொண்டு
உயிர்வோடு வாழ வழிசெய்யும்
விவாசாயி அனைவருக்கும்
மனமார நன்றி சொல்வோம்….

ஆயிஷாபாரூக் 

No comments:

Post a Comment