December 10, 2013

முத்தச்சுவை

சத்தமில்லாது நீ கொடுத்த
முத்தத்தில் உயிர்நாடி அதிர்கிறது
முத்தத்தின் இலக்கணங்களை
இலக்கங்கள் வைத்து உணர்த்திட்டாய்
காட்சியில் இல்லாத பூக்களும்
தென்படாத பட்டாம்பூச்சிகளும்
மலர்ந்து நம்மை சுற்றி பறந்தன
என்னுடலின் பாகங்கள்
யாழினை மீட்டியதோர் போல
உமிழ்நீர் சுவையோடு
மயங்கியபடி உன்னில் என்னை
நொடி நொடியாக தொலைத்தேன்
காமக்கதவுகளின் தாழினை தேடியப்படி....

 

 ஆயிஷாபாரூக்

No comments:

Post a Comment