December 3, 2013

மாற்றுதிறனாளிகள் பாக்கியவான்கள் !



கண்கள் இருந்தும் குருடாய்
காதுகள் இருந்தும் செவிடாய்
வாய் இருந்தும் ஊமையாய்
கால்கள் இருந்தும் தவறாய் பயணித்து
குறை கூறும் மனதுடன்
நிறைந்த நம் சமூகத்தில்
மாற்றுதிறனாளிகள் பாக்கியவான்கள் !

தீயதை பார்த்திடாமல்
புரணியை பேசிடாமல்
பொய்யை கேட்டிடாமல்
தவறான வழி நடந்திடாமல்
வஞ்சகம் கொண்டு மனமாக இல்லாது
வாழும் மாற்றுதிறனாளிகள் பாக்கியவான்கள் !
இறைவனால் ஆசிர்வதிக்கபட்டவர்கள்

                                                                                                                   ஆயிஷாபாரூக்

No comments:

Post a Comment