December 30, 2013

புத்தாண்டு கவிதை

கிழித்து வீசப்பட்ட தேதிகளில்
நல்லதும் கெட்டதும் கலந்து 
இன்பமும் துன்பமும் நிறைந்து
ஏற்றமும் இறக்கமும் பயணித்து
சேர்க்கையும் பிரிவும் தொடர்ந்து
வெற்றியும் தோல்வியும் வந்து
வரவும் இழப்பும் பெற்று
இறப்பும் பிறப்பும் கண்டு
உலகில் எதுவும் நிலையாது  
என நாட்காட்டி உணர்த்தியது
வருடம் வந்து போனாலும்
எந்த நிலையும் எதிர்கொண்டு
வருந்தாமல் வாழ்ந்து வந்தால்
வாழ்க்கை என்றும் இனிக்கும்
நாட்கள் யாவும் சிறக்கும்
மகிழ்ச்சி எங்கும் பரவும்
  
***********

கிழிகப்பட்ட தேதிகளை
சுமந்த நாட்காட்டிக்கு
புது வருடம் தொடக்கம்
தவறவிட்ட நேரத்தை
இழந்த மனிதனுக்கு
ஒவ்வொரு நாளும் தொடக்கம்....

                                                                                    

என் தோழமைகள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் 
 by ஆயிஷாபாரூக் 

No comments:

Post a Comment