November 24, 2013

மெய்மறந்து தலைசாயாயோ....




என்னை தேடும் வெள்ளி நிலவே உன்னை தவழும் தென்றல் நானே அன்னை மடிசாய ஏக்கமாகி தவிக்கிறாய் தாலாட்டை கேட்டு கண்ணுறங்க பார்க்கிறாய் குயிலூசையாக ஜன்னல் வழியே பாடுகிறேன் அதை கேட்டு மெய்மறந்து தலைசாயாயோ...
காலம் விதித்த கோலமடி செல்லக்கிளியே காலனின் பிடியில் அன்னையடி பிள்ளையமுதே உன்னை பிரிந்து நித்தம் துடிகின்றேன் காற்றிலே சுவாசமாகி உன்னுடன் கலந்துருப்பேன் கலங்காதே வருந்தாதே நிழலாய் தொடர்ந்துருப்பேன் இதை கேட்டு மெய்மறந்து தலைசாயாயோ....
நிஜங்களை ஏற்றுவிட்டால் வலியும் மறைந்துவிடும் மாயங்களை விலக்கிவிட்டால் உண்மைகள் புரிந்துவிடும் ஆசிர்வதித்து ஆசைகள் யாவும் தீர்த்துக்வைப்பேன் ஆபத்துக்கள் உன்னை சூழாது பார்த்துக்கொள்வேன் அஞ்சாதே அசராதே அரணாய் சூழ்ந்துருப்பேன் இதை கேட்டு மெய்மறந்து தலைசாயாயோ....
                                                                                                                    ஆயிஷாபாரூக்

No comments:

Post a Comment