November 21, 2013

மீனவ நண்பன்

மீனவர்களுக்கு அர்ப்பணம்
  



கடல் அலையை தாலாட்டாய்
கேட்டு வளர்ந்தேன்
உப்பு காற்றை உயிர் காற்றாய்
சுவாசித்து வாழ்ந்தேன்
கட்டுமர படகினிலே வாழ்கையின்
பயணத்தை தொடங்கினேன்
வலை விரித்து மீன்களை
அதிர்ஷ்ட பொக்கிஷமாய் விற்றேன்
அலை சீற்றமோ புயல் காற்றோ 
உயிர் போராடும் சவாலாய் கண்டேன்
தினமொரு பொழுது மற்றொரு வாய்ப்பு
இறப்பும்  இழப்பும் கடந்த வாழ்வு
வலை விரிக்கும் எங்களுக்கு
கை விரிக்காமல் அள்ளித்தந்தாள்
அன்னமிடம் என் வளர்ப்பு அன்னை
என் வாழ்விடமான கடல் அன்னை

ஆயிஷாபாரூக்

No comments:

Post a Comment