November 12, 2013

ஆன்மாவின் தேடல்


 பரந்து விரிந்த வானங்களில்
காலையில் புலரும் கதிரவனில்
மழையுடன் கூடிய மின்னல் இடிகளில்
தேய்ந்து வளரும் சந்திரனில்
யாருமற்ற நிசப்பத்தமான தனிமைகளில்
காடுளுடன் நிறைந்த மலை முகடுகளில்
ஆர்ப்பரித்து விழும் நீர் வீழ்ச்சிகளில்
நுண்ணுயிர் பல்லுயிர் நிறைந்த நிலங்களில்
மாலை நேர தென்றல் பொழுதுகளில்
விண்ணில் மின்னி மறையும் நட்சத்திரங்களில்
காரிருருள் சூழ்ந்துள்ள இரவு காலங்களில்
அன்றாடம் சந்திக்கும் மனித இதயங்களில்
நீக்கமற நிறைந்திருக்கும் அண்டவெளியும்
பரம்பொருளாய் இயற்கையில் நிறைந்துக்கொண்டு
மனதிலும் இறையுனர்வாய் சுடரொளி விட்டு
எழுதியவையும் எழுதாதவையுமாக நிறைந்திருக்கும்
இறைவனே உன்னையன்றி ஆன்மாவிற்கு தேடல் ஏது

ஆயிஷாபாரூக் 

No comments:

Post a Comment