March 4, 2013

மறையுமோ சாதிக்கொடுமைகள்

 மறையுமோ சாதிக்கொடுமைகள்


மனிதனின் குருதியின் நிறம் ஒன்று
வேற்றுமையின் வடிவமோ பலவுண்டு
ஏற்றமும் தாழ்வும் வகைப்படுத்தி
மனிதன் வாழ்கிறான் மிகைப்படுத்தி

பாலியல் வன்முறைகள் கட்டவிழ்த்து
உணர்வுடன் உயிரை வதைச் செய்து
என்ன சுகம் நீவீர் காண்பீரோ
இரத்த வாடையில் குளிர் காய்வீரோ

சாதி மனதை தீக்கரையாக்குது
சகமனிதனின் வாழ்வை சீரழிக்குது
வன்கொடுமையை தொடுக்கின்றான்
வாழும் உரிமையை கெடுகின்றான்

எரிவது உடமைகள் மட்டுமல்ல
சாதியக் கொடுமையின் உருவமும் தான்
எத்தனை வடிவம் பெரியார் எடுத்தாலும்
சாதிக்கொடுமைகள் இங்கு மறையாதோ….


                                                                                                                             **ஆயிஷா பாரூக்**

4 comments:

  1. முடிவில் உள்ள இரண்டு வரிகள் தான் கேட்கத் தோன்றுகிறது...

    ReplyDelete
  2. kevalamaana manitha manam...

    ReplyDelete
  3. //எரிவது உடமைகள் மட்டுமல்ல
    சாதியக் கொடுமையின் உருவமும் தான்
    எத்தனை வடிவம் பெரியார் எடுத்தாலும்
    சாதிக்கொடுமைகள் இங்கு மறையாதோ…//

    மறைய வேண்டும் என தான் நினைக்கிறோம் ஆனால் சில வீணா போன நபர்களால் வளர்கிறதே

    ReplyDelete