March 5, 2013

விடியலை தேடும் முகங்கள்

விடியலை தேடும் முகங்கள்

 

எத்தனை தோல்வி வந்தாலும்
வெற்றியின் பாதை மாறாது
முயற்சி மட்டுமே துணையோடு
உறுதியோடு நீ நடைப்போடு

தோல்வி மட்டுமே நிலையில்லை
துணிந்துவிட்டால் வானே எல்லை
துவண்டு போயி சோர்ந்திடாதே
தோல்வியே முடிவுயென நினைக்காதே

சோதனையன்றி சாதனை எளிதல்ல
உழைப்பின்றி வெற்றியும் உனதல்ல
முன்னேறு பல தடையை நீ கடந்து
உயர்வாய் நீ வெற்றி களிப்போடு

இரவும் பகலும் காலத்தின் சமநிலை
வெற்றியும் தோல்வியும் நிலையில்லை
மனஉறுதியுடன் எதிர்கொள்ளும் மனநிலை
வந்துவிட்டால் வாழ்வில் பயம்மில்லை..

ஆயிஷாபாரூக்

3 comments:

  1. unmai !

    thannampikkai
    varikal..!

    ReplyDelete
  2. அனைத்தும் தன்னம்பிக்கை வரிகள் ...

    அருமை...

    ReplyDelete
  3. தன்னம்பிக்கையூட்டும் வரிகள்....

    நல்ல கவிதைப் பகிர்வுக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete