June 13, 2012

அன்பு கணவனுக்கு.....


எனக்காய்  பிறந்தாயே
வாழ்வின் அர்த்தமாய்
மனதில் விதைதாயே
உயிர்வரை சென்றாயே
நினைவின் முழுமையாய்
நாளும் வாழ்ந்தாயே

நட்பாய்  நுழைந்தாயே
அன்பின் வடிவமாய்
உயிரில் கலந்தாயே
காதலாய் மலர்ந்தாயே
உணர்வின் பிம்பமாய்
வாழ்வில் இணைந்தாயே

இசையின் ராகமாக
ஆதார சுருதியாய்
லயத்தில் சேர்ந்தாயே
நடனத்தின் ஜதியாக
உள்ளத்தின் பாவமாய்
தாளத்தில் ஒலித்தாயே

அன்பின் வினையாக
ஈரேழு ஜென்மமாய்
என்னை தொடர்ந்தாயே
தவத்தின் பயனாக
அன்பு கணவனாய்
வாழ்க்கை அளித்தாயே 

ஆயிஷா பாரூக் 

1 comment:

  1. அத்தான் நலமா அக்கா???
    hahahahahahahaha...........

    ReplyDelete