December 26, 2012

திருமணம்



 
தோரணமும் மாலைகளும் 
வாசலில் அலங்கரிக்க
பன்னீரும் சந்தனமும்
வாசமுடன் வரவேற்திட 

இருமனம் ஓர்மனமாய் 
காதலில் கரைந்துருக 
வாழ்த்துகளும் ஆசிகளும்
வாழ்வுதனை இனித்திட

காலம் கடந்தும்
காவியம் காணும்
உறவுதனை மண்ணுலகம்
விண்ணுலகம் சேர்த்திட

பகலிரவு நேரங்களிலும்
இன்பதுன்ப நிகழ்வுகளிலும்
வாழ்வுதனை சேர்ந்தே
பயணித்து வாழ்ந்திடுவோம்

அன்புடன்
ஆயிஷாபாரூக்

7 comments:

  1. பகலிரவு நேரங்களிலும்
    இன்பதுன்ப நிகழ்வுகளிலும்
    வாழ்வுதனை சேர்ந்தே
    பயணித்து வாழ்ந்திடுவோம்

    இனிய வாழ்த்துகல்

    ReplyDelete
  2. திருமணம்..
    இருமனங்களின் கலவை...
    அழகான வரிகள்

    ReplyDelete
  3. nan oru thirunangai ai thirumanam seithu kolla asai padugiren..pls help me

    ReplyDelete
  4. இருமனங்களின் புரிந்து கொள்ளலில்தான் திருமண வாழ்க்கை முழுமை அடைகிரது அதை அழகாக சொல்லிய கவிதை நல்லா இருக்கு.

    ReplyDelete
  5. திருமண கவிதை சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

  6. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


    அன்புடன்
    மதுரைத்தமிழன்

    ReplyDelete