October 23, 2012

பெண்களின் கவனத்திற்கு...

இந்திய குடும்ப பெண்கள் தங்களின் குடும்பத்தை கவனிப்பதில் அதிக கவனம் செலுத்தி தங்களை பற்றி அதிகமாக கவனிப்பது இல்லை. இந்தியாவில் இருபத்தி இரண்டு பெண்களுக்கு ஒருவர் என மார்பக புற்றுநோய் பாதிக்கப்படுவதாக அகில இந்திய மருத்துவ விஞ்ஞானம் நிறுவன நோய் கட்டிகள் பற்றிய ஆய்வு பேராசிரியர் ஜுல்க தெரிவித்தார். இதே எண்ணிக்கை வளர்ந்த நாடுகளில் எட்டுக்கு ஒரு பெண்மணி விதம் மார்பக புற்றுநோய் காரணமாக பாதிக்கப்படுகிறார்கள்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோயை விட தற்பொழுது மார்பக புற்றுநோய் அதிகமான அளவில் உள்ளதாக அறியப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 1,15,000 புதிய மார்பக புற்றுநோய் நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். 2015 ஆம் ஆண்டு  250,000 புதிய மார்பக புற்றுநோய் நோயாளிகள் உயர வாய்ப்பு உள்ளது. மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை மற்றும் பிறகு சாத்தியமான கீமோதெரபி அல்லது கதிர்வீச்சு அல்லது இரண்டினாலும் சிகிச்சையளிக்கப்படுகிறது. மார்பக புற்றுநோய் உலகின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 10.9 மில்லியன் மக்கள் மார்பக புற்றுநோயால் உலகளவில் பாதிக்கப்படுகின்றனர். 6.7 மில்லியன் மக்கள் மார்பக புற்றுநோயால் உலகளவில் இறக்கின்றனர்.

ஆபத்து காரணிகள் :-
  • பெரும்பாலும் ஆண்களை விட பெண்களுக்கே மார்பக புற்றுநோய் வர அதிக வாய்ப்பு உள்ளது.
  • முப்பது வயதை கடந்த பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வர சாத்தியக்கூறு உள்ளது.
  • கருப்பு நிற பெண்களை விட சிகப்பான பெண்களுக்கு  மார்பக புற்றுநோய் அதிகம் வர சாத்தியம் உள்ளது.
  • தாய்,சகோதரி, மகள் என்று அறியப்படும் நெருங்கிய உறவுகள் மற்றும் பாட்டி, சித்தி இரண்டாம் நிலை உறவினர்கள் எவருக்கேனும் மார்பக புற்றுநோய் இருந்தால் மார்பக புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது.
  • 12 வயதிலேயே வயதுக்கு வந்த பெண்கள் அல்லது 55 வயது கடந்து மெனோபாஸ் ஆகும் பெண்களுக்கு  மார்பக புற்றுநோய் ஆபத்து உள்ளது.
  • கொழுப்பு நிறைந்த அதிக உணவு உட்கொள்ளும் பெண்களிடமும், மற்றும் அதிக எடை அல்லது உடல்பருமன் கொண்ட பெண்களுக்கு  மார்பக புற்றுநோய் ஆபத்து உள்ளது.
  • மது உட்கொள்ளும் பெண்களுக்கு இந்த மார்பக புற்று நோய் வர வாய்ப்பு உள்ளது.
 
மார்பக புற்றுநோய் அறிகுறிகள்:-
  • மார்பகம் உணர்ச்சியற்று இருத்தல் அல்லது மார்பகத்தில் கட்டி உருவாகுவது.
  • அக்குள்களில் அல்லது அதற்க்கு அருகில் கட்டி உருவானால் புற்றுநோய்க்கான ஒரு அடையாளம் இருக்காலாம்.
  • பெரும்பாலான மார்பக கட்டிகள் புற்றுநோய் இல்லை எனினும் ஒரு மருத்துவர் மதிப்பீடு வேண்டும்.
  • மார்பகத்தில் இருந்து இரத்தம் வருவது.
  • முலைக்காம்பில் மாறுபாடுகள்.
  • மார்பக தோலில் ஏற்படும் மாற்றங்கள் சிவத்தல், அமைப்பு மாற்றங்கள் போன்றவை அடங்கும். இந்த மாற்றங்கள் பொதுவாக தோல் நோய்கள் அறிகுறிகளாக இருக்கலாம், ஆனாலும் சில நேரங்களில் மார்பக புற்றுநோய் தொடர்பில்  முடியும்.
இத்தகைய அறிகுறிகள் ஏதேனும் உங்களுக்கு அறிந்தால் உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுகவும்.


மார்பக புற்றுநோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை:-

மார்பக புற்றுநோய் கண்டறிதல் வழக்கமாக மார்பக பயாப்ஸி, மேம்மோகிராஃபி, அல்ட்ராசோனோகிராபி அல்லது MRI பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மூலம் கண்டறியப்படும். மார்பக கட்டியின் அடிப்படையில் மார்பக புற்றுநோய் ஐந்து நிலைகளில் வகைப்படுத்தப்படும். மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்படுக்கிறது, அதற்க்கு பிறகு நோயின் தீவிரத்தின் அடிப்படையில் கதிரியக்க சிகிச்சை, கீமோதெரபி அல்லது ஹார்மோன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 
மாதவிடாய் நின்ற பின்னர் அணைத்து பெண்களும் ஒரு தடவை மார்பக பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது. நம் இந்திய பெண்கள் பெரும்பாலும் பாலியல் நோயாக இருந்தாலும் மார்பக நோய் இருந்தாலும் வெளியே சொல்ல தயங்குகின்றனர். சிகிச்சை பெற முன்வருவது கிடையாது. இத்தகைய சூழல் மாற வேண்டும். கிராமப்புற பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பற்றி போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.

அன்புடன்
ஆயிஷாபாரூக்



21 comments:

  1. பயனுள்ள பகிர்வு சகோ.

    ReplyDelete
  2. Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி

      Delete
  3. அறிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி

      Delete
  4. பயனுள்ள பதிவு பெண்களுக்கு ரொம்ப ரொம்ப பிரயோசனமான பதிவு

    ReplyDelete
  5. பெண்கள் அவசியம் தெரிந்து கொளவேண்டிய விழிப்புணர்வு பகிர்வு நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி

      Delete
  6. அனைத்து வித பெண்களும் அறிந்துகொள்ள வேண்டிய செய்தி...

    தொடருங்கள் தோழி...

    ReplyDelete
  7. பொதுவாகவே உடலைப்பற்றிய விழிப்புணர்வுகளும்,மாற்றூ மருத்துவம் பற்றீய கருத்துக்களும் மிகவும் கம்மியாகவே இங்கு/

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி

      Delete
  8. பயனுள்ள இதுவரை அறியாத
    தகவல்கள் அடங்கிய அருமையான பதிவு
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி

      Delete
  9. அருமையான பகிர்வு ஆயிஷா!! உண்மையில் இப்போது பல்கி பெருகி வருகிறது.. இந்த அவசர உலகில் தாய்பால் கொடுக்காத மகளிருக்கும் இந்த வாய்ப்பு அதிகமாக உள்ளது.. சில மாதங்களுக்கு முன்பு என் தந்தை வழி பாட்டி மார்பக புற்றுநோயால் இறந்தார்.. அவர் காலம் தாழ்த்தி சிகிச்சை செய்ததால் தான் இறப்பு ஏற்பட்டது.. பெண்களின் அலட்சிய போக்கும் இதற்க்கு முக்கிய காரணம்..


    காஞ்சீபுரத்தில் அண்ணா புற்றுநோய் மருந்துவமனை திறம்பட இயங்கி வருகிறது ..

    மகளிர் தங்கள் உடல் நலத்தில் அக்கறை எடுத்து கொள்ள வேண்டும்!!!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி..

      Delete
  10. அருமையான விழிப்புணர்வு கட்டுரைப்பா ஆயிஷா.... ஆமாம் உண்மையே... பெண்களுக்கு தான் அதிகம் மார்பக புற்றுநோய் வருகிறது என்ற ஆய்வு கண்டறிந்து சொல்வது.... தன் நலனைப்பற்றி கவனிக்காது எப்போதும் குடும்பத்துக்காக உழைத்து தனக்கு ஒரு பிரச்சனை என வரும்போது ஸ்தம்பித்து விடுகிறார்கள் பெண்கள்...

    மிக அருமையான தொகுப்புப்பா... எல்லோரும் படித்து பயன்பெறக்கூடிய வகையில் சிறப்பாக புற்றுநோய்க்கான காரணங்களும் விளக்கி இருப்பது போற்றுதற்குரியது...

    மெனோபாஸ் கடக்கும் ஒவ்வொரு பெண்ணும் மார்பகப்புற்று நோய் பரிசோதனை செய்துக்கொள்வது போன்ற பயனுள்ள விவரங்கள் பகிர்ந்தமைக்கு மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா ஆயிஷா...

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி

      Delete
  11. http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_15.html

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

    ReplyDelete

  12. நல்ல பதிவை நலமுற தந்துள்ளீா்
    வல்ல திறனை வகுத்து!

    ReplyDelete
  13. வணக்கம்...

    அருமையான இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_21.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  14. விழிப்புணர்வு பகிர்வு.பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete